கொஞ்சம் ஓவராத்தான் மரம் நட்டுட்டமோ.. இப்டி ஓயாம மழை பேய்ஞ்சிட்டே இருக்கே!
சென்னை : வடமாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகமே இப்போது மழையில்தான் தத்தளித்து வருகிறது என்பதால், மழை, வெள்ளம் பற்றிய மீம்ஸ்களை பஞ்சமின்றி வாரி இறைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஆக்கிரமிப்புகள், குப்பைக் கூளங்கள், தூர் வாராத வடிகால்கள் என பல இடங்களில் மழை நீர் இன்னமும் வடியவில்லை. இதனால் சென்னை மக்கள் இன்னமும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவில்லை. இந்நிலையில் தென் மாவட்டங்களில் கொட்டி வரும் மழையும், வடமாவட்டங்களில் மீண்டும் எட்டிப் பார்க்கும் கருமேகங்களையும் வைத்து விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளங்களில்.

மழை நீர் வடியாமல், இவ்வளவு வெள்ளம் வந்ததற்கு யார் யாரெல்லாம் காரணம் என்பதை, நகைச்சுவையாக, அதே சமயம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படியாக மீம்ஸ்களாக்கி இருப்பது ரசிக்கும்படி உள்ளது.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





















Click it and Unblock the Notifications