எல்லோரும் வீட்ல இருந்தீங்கன்னா MAYல மீட் பண்ணலாம்.. இல்லன்னா ‘மேல’ தான் மீட் பண்ணனும்
சீனாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதைப் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: சீனாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதை நினைத்து இப்போதே மீம்ஸ் போட்டு புலம்ப ஆரம்பித்து விட்டனர் மக்கள்.

கடந்த 2020ம் ஆண்டு இதே மார்ச் மாதத்தில் தான் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் ஆரம்பித்தது. அதன் பிறகு ஊரடங்கு, மாஸ்க், சமூக இடைவெளி என இந்த இரண்டு வருடங்களில் கொரோனாவோடு நாம் வாழப் பழகி விட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக இந்தியாவில் மூன்றாவது அலை உருவாகக் காரணமாக இருந்த ஒமைக்ரான் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாததால், கொரோனா பயம் நீங்கி மக்கள் இப்போது தான் மெல்ல மெல்ல புதிய இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் திரும்பவும் சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்திருப்பதாக வெளியாகி வரும் தகவல்கள் லேசாக பயத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது. அதுவும் மார்ச் மாதம் என்பதால் பழைய மாதிரியே இந்தியாவிலும் கொரோனா ருத்ரதாண்டவம் ஆடி விடுமோ என்ற சந்தேகமும், பயமும் மக்கள் மனதில் எழத்தான் செய்கிறது.

தடுப்பூசி மூலம் கொரோனாவை வென்று விடலாம் என்றாலும், ஏற்கனவே ஊரடங்கு காலங்களில் வாங்கிய கடனையே இன்னமும் கட்டி முடிக்காத சூழலில், மீண்டும் கொரோனா தொழில் வாய்ப்புகளை முடக்கிப் போட்டு, திரும்பவும் கடன் வாங்க வைத்து விடுமோ என்பதே மக்களின் பயத்திற்கு முக்கியக் காரணம்.

தங்களது பயத்தை வித்தியாசமாக மீம்ஸ் போட்டு சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். 'வீரம்ங்கறது என்னன்னா.. பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது..' என்ற கமல் பட வசனம் தான் இந்த மீம்ஸ்களைப் பார்க்கும் போது ஞாபகத்திற்கு வருகிறது.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...























Click it and Unblock the Notifications