ஹலோ.. யாரு என்னைப் படைச்ச கடவுள் சாரா.. எனக்கு சந்தோசத்தை எப்போதான் குடுப்பீங்க?
சென்னை : கடவுளுக்கும், பக்தர்களுக்கும் இடையிலான உரையாடல் எப்படியெல்லாம் இருக்கும் என்பதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் நெட்டிச்னகள்.
மனிதர்களுக்கு எப்போதுமே மனதுக்கு நெருக்கமான நண்பர்/தோழி என்றால் அது நிச்சயம் கடவுள்தான். அதனால்தான் மிகவும் உரிமை எடுத்து, பிரார்த்தனைகளின் போது வேண்டுவது, சமயத்தில் அடம் பிடிப்பது, அட கோபத்தில் திட்டக்கூட செய்கிறார்கள். ஏனெனில் அந்தளவுக்கு வார்த்தைகளில் சொல்ல முடியாத பந்தம் கடவுளுக்கும், பக்தர்களுக்கும் இடையில் இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.
அதனால்தான், சமயத்தில் மனது பாரமாக இருக்கிற சமயங்களில், கடவுளிடம் முறையிடுவது மாதிரியான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து விடுகின்றனர். "ஹலோ.. யாரு என்னைப் படைச்ச கடவுள் சாரா.. எனக்கு சந்தோசத்தை எப்போதான் குடுப்பீங்க?" என வடிவேலு டெம்ப்ளேட்டில் பகிரப்பட்டும் மீம்ஸ்கள் வேற லெவலில் உள்ளன.
சில மீம்ஸ்களில் கடவுளும் பக்தர்களின் கேள்விக்கு பதில் தருவது போல் இருப்பது வேற லெவல். "உன் வாழ்க்கை உன் கைல எல்லாம் இல்ல.. உன் வாயில தான் இருக்கு.. அதை நீ கொஞ்சம் மூடிட்டு இருந்தாலே எல்லாம் நல்லபடியா நடக்கும்" என்பது மாதிரியான மீம்ஸ்கள் சிரிக்க மட்டுமின்றி, 'அட உண்மைதாங்க' என சிந்திக்கவும் வைக்கின்றன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...



















Click it and Unblock the Notifications