பிட்டு படம் பார்க்கும்போது வந்த அலர்ட்.. கண்ணுல மரண பயத்தைக் காட்டிட்டாங்க பரமா!
சென்னை: தமிழகத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களுக்கு அனுப்பப்பட்ட எமர்ஜென்சி மெசேஜைப் பார்த்து, அவர்கள் எப்படியெல்லாம் பயந்து போனார்கள் என்பதை மீம்ஸ் போட்டு நகைச்சுவையாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
பேரிடர்களின் போது மக்களிடம் அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" சோதனை தமிழகத்தில் உள்ள ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முதல் பல செல்போன்களில் இந்த சோதனை எச்சரிக்கை மெசேஜ் அனுப்பப்பட்டு வருகிறது.
இது பற்றிய தகவல்களை அறிந்து கொண்டவர்கள், இந்த மெசேஜைப் பார்த்து எதுவும் பயப்படவில்லை. ஆனால், இது பற்றி எதுவும் தெரியாமல், திடீரென போனில் எமர்ஜென்சி அலர்ட் சத்தம் கேட்டதும், பதறிப்போனவர்கள் ஏராளம்.
அப்படிப்பட்டவர்கள் தான் மீமர்களின் இன்றைய மீம்ஸ் கண்டெண்ட். அவர்கள் இந்த எமர்ஜென்சி மெசெஜைப் பார்த்து எப்படியெல்லாம் பீல் பண்ணியிருப்பார்கள் என மீம்ஸ் போட்டு வருகின்றனர் சமூகவலைதளங்களில்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...


















Click it and Unblock the Notifications