சிக்கன் பிரியாணி+ மட்டன் வருவல்= குட் காம்பினேஷன்.. 1ம் தேதி உங்களை மீட் பண்றேன்!
மாதக் கடைசி கையில் காசில்லை என்பதை மீம்ஸ் போட்டு சொல்லி வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: மாதக் கடைசி கையில் காசில்லை யாராவது கடன் கொடுத்தால் நல்லது என்பதை மீம்ஸ் போட்டு சூசகமாக கடன் கேட்டு வருகின்றனர் விஷமக்கார நெட்டிசன்கள்.
கண்ணை மூடித் திறப்பதற்குள் மே மாதம் முடிந்து விட்டது. மாத துவக்கத்தில் சம்பளம் வாங்கி ஜமாய்த்தவர்கள் எல்லாம், மாதக் கடைசியில் கையில் காசில்லாமல் புலம்புவது வழக்கம் தான். என்ன எப்போதும் தங்களது நெருங்கிய வட்டாரத்திற்குள் புலம்புபவர்கள், இந்த முறை கொஞ்சம் சத்தமாக சமூகவலைதளங்களில் புலம்பி வருகின்றனர். அதுவும் ரசிக்கும்படியான மீம்ஸ் போட்டு அவர்கள் புலம்புவது ரசிக்கும்படி இருப்பதால், பலரும் அதனை பகிர்ந்து வருகின்றனர்.
முன்பெல்லாம் கையில் காசில்லை, பாக்கெட்டில் பணமில்லை என்றுதான் புலம்புவார்கள்.. இப்போது கொஞ்சம் வித்தியாசமாக ஏடிஎம்மில் பணம் எடுக்கப்போனால், அக்கவுண்ட்டில் சில்லறைகூட இல்லை என காலத்திற்கு தகுந்தவாறு மீம்ஸ் போட்டுள்ளனர்.
வழக்கம்போலவே, மாதக் கடைசியில் மக்கள் படும் வேதனைகளில் பிரியாணியையும் சேர்த்துள்ளது ர(ரு)சிக்கும்படி உள்ளது.