மழை பெய்ஞ்சா மண் வாசம் எங்க வருது.. பக்கத்து வீட்ல சுட்ற பஜ்ஜி வாசம்தான் வருது!
சென்னை : மதுரை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் விடாது பெய்து வரும் மழையை வைத்து, சமூகவலைதளப் பக்கங்களில் மீம்ஸ் மழை பொழிந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
அடாது மழை பெய்தாலும் சரி, விடாது வெயில் கொளுத்தினாலும் சரி.. நம் நெட்டிசன்கள் உடனே அதை மீம்ஸ் போட்டு கொண்டாடத் தொடங்கி விடுவார்கள். அதிலும் வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டால், அவர்கள் பாடு கொண்டாட்டம்தான். தமிழகத்தின் எந்த மூலையில் மழை கொட்டினாலும், உடனே தங்கள் பகுதியில் மழை பெய்தது மாதிரி குளிர்ச்சியைக் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள்.
இப்போதும் அப்படித்தான் மதுரை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருவதை வைத்து, நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த மழையிலும் ஃபேன்களுக்கு விடுமுறை விடாமல், துணியை உலர வைக்கும் காட்சிகளை தங்கள் ஸ்டைலில் மீம்ஸ்களாக்கி இருப்பது ரசிக்கும்படி உள்ளது.
அதேபோல், 'இன்னைக்கு மழைல நனைஞ்சுட்டேன்.. என் மனசுல இருக்க அவளுக்கு சளி பிடிச்சுடுமோனு பயமா இருக்கு..' என்பது மாதிரியான மீம்ஸ்கள் வேற லெவல். இப்போதெல்லாம் மழையைக் கொண்டாட பல வீடுகளில் உடனே பஜ்ஜி போட ஆரம்பித்து விடுகின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டும், 'மழை பெய்ஞ்சா மண் வாசம் எங்கடா வருது.. பக்கத்து வீட்ல சுடுற பஜ்ஜி வாசம்தான் வருது' கலாய்ச்சிபை ரகம்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மழை ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications