வண்டி வீட்ல இருக்கு சார்.. எல்லாம் கரெக்ட்டா இருக்கானு சொல்லுங்க.. போய் எடுத்துட்டு வர்றேன்!
புதிய வாகனச் சட்டத்தில் அபராதத் தொகை அதிகரித்திருப்பதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: தமிழகத்தில் சாலை போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை பன்மடங்கு அதிகமாகி இருப்பதை வைத்து சமூகவலைதளங்களில் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்தது. முன்பை விட, அதில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதத் தொகை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை ஒருபுறம் ஏறி வருவதால் சோகத்தில் இருந்த வாகன ஓட்டிகள், தற்போது இந்த அபராதத் தொகை அதிகரிப்பதால் இன்னமும் சோகம் அதிகமாகி, சமூகவலைதளங்களில் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
வாகன ஓட்டிகளின் நன்மைக்காகத்தான் இத்தகைய கட்டுப்பாடுகள் மற்றும் அபராதத் தொகை விதிக்கப்படுகிறதென்றாலும், வாங்குற சம்பளத்துல பின்னாடி லிப்ட் கேட்டு உட்கார்ந்து வருகிறவர்களுக்கெல்லாம் ஹெல்மெட் போடாததற்காக நாம் அபராதம் கட்ட முடியாதே என்ற ஆதங்கமும் நியாயமானதுதான்.
இப்படியாக இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகப் போகும் நிலையில், இன்னமும் அது பற்றிய விதவிதமான மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ, அதில் சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...























Click it and Unblock the Notifications