நாளைக்கு இந்நேரம்லாம் ஸ்கூல்ல இருப்போம்ல.. அதை நினைக்கும்போது எனக்கு ஈரக்குலையே நடுங்குதே!
சென்னை: கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்க இருப்பதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதத் துவக்கத்திலேயே திறந்திருக்க வேண்டிய பள்ளிகள், வெயிலால் தள்ளிப் போய் ஒரு வழியாக நாளை திறக்கப்பட இருக்கிறது. தொடர்ந்து விடுமுறை நீட்டிக்கப்பட்டதால் மகிழ்ச்சியாய் இருந்த மாணவர்கள், வழக்கம் போல நாளையும் பள்ளித் திறப்புத் தள்ளிப் போகுமா எனப் பெரிதும் எதிர்பார்த்தனர்.
ஆனால், இம்முறை விடுமுறை மீண்டும் நீட்டிக்கப்படவில்லை. போதாக்குறைக்கு நீட்டிக்கப்பட்ட விடுமுறையை சமன் செய்யும் வகையில், இனி சனிக்கிழமைகளிலும் பள்ளி உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தாலும், மாணவர்களைப் போலவே ஆசிரியர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான பள்ளித் திறப்பு பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications