வெள்ளினா சாம்பார் வைக்கத் தெரிஞ்ச உனக்கு.. ஞாயிறுனா கறிகுழம்பு வைக்கணும்னு தோணலையே!
சென்னை: ஞாயிற்றுக்கிழமை என்றால் வீட்டில் கறிக்குழம்பு இருந்தே ஆக வேண்டும் என்பது எழுதப்படாத விதி என மீம்ஸ் போட்டு ஜமாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஞாயிற்றுக்கிழமை என்பது வீட்டில் அசைவம் சமைப்பதற்கு மட்டுமல்ல.. சமூகவலைதளங்களில் விதவிதமான சாப்பாடு பற்றிய மீம்ஸ்களைப் பகிர்வதற்குமான நாள் என மாற்றி விட்டனர் நம் மீமர்கள். அதனால்தான் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் சாப்பாடு மீம்ஸ்களால் கமகமத்துக் கிடக்கின்றன சமூகவலைதளப் பக்கங்கள். இந்த ஞாயிறும் அதற்கு விதிவிலக்கல்ல..
'வெள்ளிக்கிழமைனா சாம்பார் வைக்கத் தெரிஞ்ச உங்களுக்கு.. ஞாயிற்றுக்கிழமைனா கறிக்குழம்பு வைக்கத் தோணலையே..' என்பதில் ஆரம்பித்து, 'மனிதன் உயிர் வாழ மூன்று வேளை சாப்பாடு மட்டும் போதாது.. இடையிடையே நொறுக்குத் தீனியும் வேண்டும்' என எங்கு திரும்பினாலும் சாப்பாடு பற்றிய மீம்ஸ்கள் தான் கண்ணில் படுகின்றன.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...























Click it and Unblock the Notifications