மழை வந்ததும் கவிதை பாடினால் கவிஞன்.. அதுவே காயப்போட்ட துணி ஞாபகத்திற்கு வந்தால் குடும்பஸ்தன்!
மழையால் ஈரத் துணிகள் காயாமல் இருக்கும் பிரச்சினையை வழக்கம்போல் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மழைக்காலத்தில் ஈரத் துணிமணிகள் காயாமல் படுத்தி எடுப்பதை மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
மழைக்காலத்தில் ஈரத்துணிகள் காயாமல், கூடவே ஒரு கெட்ட வாடையையும் ஒட்டி வைத்துக் கொண்டு மக்களை பாடாய் படுத்தி எடுத்து விடுகிறது. மழையை ரூம் போட்டு ரசிப்பவர்களைக்கூட, 'ச்சே சூரியன் எப்போ வருமோ?' என நினைக்க வைத்து விடுகிறது இந்த ஈரமான துணிமணிகள்.
துவைத்த துணி காயாது, மழை நின்ற பிறகு காய வைத்துக் கொள்ளலாம் என நினைத்தாலும், வெளியில் செல்லும்போது மழையில் நனையும் துணிகளை என்ன செய்வது? குறிப்பாக ஜீன்ஸ் போன்ற கனமான ஆடைகள் காய்வதற்கு ஒரு யுகமே தேவைப்படும் போல. இந்த ஈரத்துணி வேதனைகளை வழக்கம் போல் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...


















Click it and Unblock the Notifications