தக்காளி.. ஆர்சிபிக்கே ஒரு காலம் வரும்போது.. நமக்கு ஒரு காலம் வராமலா போய்டும்!
சென்னை : ஐபிஎல் தொடரில் ஒரு வழியாக வெற்றிக் கோப்பையை தட்டிச் சென்று, நிஜமாகவே 'இ சாலா கப் நம்தே' என ஆர்சிபி அணி நிரூபித்து விட்டாலும், மீம்ஸ் போட்டு அந்த அணியைக் கலாய்ப்பதை நிறுத்துவதாக இல்லை நம் நெட்டிசன்கள்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில், இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை வென்று, கோப்பையைக் கைப்பற்றியுள்ளது ஆர்சிபி. கடந்த 18 ஆண்டுகளாக, 'இ சாலா கப் நம்தே' என ஒவ்வொரு தொடரிலும் சொல்லி வந்ததை, இந்த ஆண்டு நிஜமாக்கி விட்டது அந்த அணி. இதனால் நேற்றிரவு முதலே அந்த அணி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் ஒருபுறம் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்க, வழக்கம் போல் நம் குறும்புக்கார நெட்டிசன்கள், அவர்கள் வாங்கிய ஐபிஎல் கோப்பையைக் கலாய்த்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். இதுவரை அந்த அணியின் ரசிகர்களை, தோல்விக்காக கலாய்த்து வந்தவர்கள், இப்போது வெற்றி பெற்றாலும் அதை வைத்தும் கலாய்த்து வருகின்றனர்.
'தக்காளி ஆர்சிபிக்கே ஒரு காலம் வரும்போது.. நமக்கு ஒரு காலம் வராமலா போய்டும்.. வெயிட் பண்ணுவோம்!' என சில மீம்ஸ்கள் வன்மத்தைக் கக்குவது போல், நினைத்து நினைத்து சிரிக்கும்படி உள்ளன. வெறும் ஆர்சிபியை மட்டும் கலாய்க்காமல், சைடுகேப்பில் சிஎஸ்கேவையும் கலாய்க்க தவறவில்லை நம் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications