விர்னு ஏறுது மழை தண்ணி.. ஆபீஸ் போற குழந்தைக்கெல்லாம் லீவு இல்லையாமே.. மழை + ராஜா + பஜ்ஜி.. வேற லெவல்
சென்னை: "எங்க தெருவுல தண்ணி வந்துடுச்சு" என்று மழை நீரை வைத்து நெட்டிசன்கள் இணையத்தில் மீம்ஸ்களை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் மழை பெய்ய துவங்கிவிட்டது.. அதுவும் நேற்று முன்தினம் முதல் கனமழை வெளுத்து கட்டியது.. விடிய விடிய பெய்த மழையால், நேற்று பகல் வேளைகளிலும் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

மழை: சென்னை மட்டுமின்றி, சுற்றுவட்டார பகுதிகளிலும், வெளி மாவட்டங்களிலும் மழை பெய்தது. சென்னை நுங்கம்பாக்கம், சூளைமேடு, தி.நகர், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், பரங்கிமலை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மீனம்பாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி, திரிசூலம், எழும்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்ததால், சாலையோரங்களில் மழைநீர் தேங்கி நின்றதை காண முடிந்தது.

மீட்பு பணிகள்: சென்னையில் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.. ஆனாலும், மழைநீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் மாநகராட்சிப் பணியாளர்களும், மாநில பேரிடர் மீட்புக்குழுவினரும், மேற்கண்ட பகுதிகள் என்றில்லாமல், மழைநீர் தேங்கி நின்ற பகுதிகளில் களப்பணியில் இறங்கினர்.. தேங்கி நின்ற நீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.. அந்தவகையில், மாநகராட்சியும் அரசும் சிறப்பாக மீட்பு பணியை கையாண்டது சென்னைவாசிகளை ஈர்த்திருந்தது.

இதனிடையே, இந்த மழையை வைத்து, இன்னமும் மீம்ஸ்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.. "இப்ப மழை, பஜ்ஜி, ராஜான்னு chennairains# ஸ்டேட்ஸ் போட வேண்டியது, இன்னும் ரெண்டு நாள் மழை வந்தா, ஹெலிகாஃப்டர்ல வந்து எனக்கு பிரட் போடு, பிஸ்கட் போடுன்னு pray for chennai#-ன்னு போட வேண்டியது

விடியல் ஆட்சியா: "வரலாறு காணாத மழைன்னு வானிலை ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் சொல்றாங்க.. ஆனா எங்கியுமே தண்ணி நிக்கலயே. இதுதான் திராவிட மாடலா? விடியல் ஆட்சியா? யார ஏமாத்த பாக்குற. ஏய் மோசக்காரா chennairains#

ஆபீஸ் போற குழந்தைக்கெல்லாம் லீவு இல்லையாமே, ஒரு 10 நிமிஷம் ஸ்டாப் ஆனா ஆபீஸ் போயிடுவேன்.. நிக்க மாட்டேங்குதே.. ரொம்ப கவலையா இருக்கு மாமே என்றெல்லாம் மீம்ஸ்கள் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.





அடுத்த அறிவிப்பு: இந்நிலையில், மழை தொடரும் என்ற அடுத்த செய்தியும் வெளியாகி உள்ளது.. குறிப்பாக இன்றும் வட தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்வீட்டிலும், "மழை மேகங்கள் உள்ளே நகர்கின்றன. நேற்று (ஜூன் 18 இரவு) இரவு போல் இல்லை. விட்டு விட்டு மழை தொடரும்" என்று பதிவிட்டுள்ளார்.
-
சென்னையை குளிர்வித்த திடீர் மழை ஏன்? தமிழக எல்லையான தடாவில் நடந்த அந்த சம்பவம்! வெதர்மேன் விளக்கம் -
சென்னையில் மழை! கருமேகம் சூழ்ந்து மரங்கள் அசைந்தாடி! குளிர்ந்த காற்றுடன் இடி சப்தமும் கேட்குது! -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது?












Click it and Unblock the Notifications