விர்னு ஏறுது மழை தண்ணி.. ஆபீஸ் போற குழந்தைக்கெல்லாம் லீவு இல்லையாமே.. மழை + ராஜா + பஜ்ஜி.. வேற லெவல்
சென்னை: "எங்க தெருவுல தண்ணி வந்துடுச்சு" என்று மழை நீரை வைத்து நெட்டிசன்கள் இணையத்தில் மீம்ஸ்களை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் மழை பெய்ய துவங்கிவிட்டது.. அதுவும் நேற்று முன்தினம் முதல் கனமழை வெளுத்து கட்டியது.. விடிய விடிய பெய்த மழையால், நேற்று பகல் வேளைகளிலும் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

மழை: சென்னை மட்டுமின்றி, சுற்றுவட்டார பகுதிகளிலும், வெளி மாவட்டங்களிலும் மழை பெய்தது. சென்னை நுங்கம்பாக்கம், சூளைமேடு, தி.நகர், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், பரங்கிமலை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மீனம்பாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி, திரிசூலம், எழும்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்ததால், சாலையோரங்களில் மழைநீர் தேங்கி நின்றதை காண முடிந்தது.

மீட்பு பணிகள்: சென்னையில் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.. ஆனாலும், மழைநீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் மாநகராட்சிப் பணியாளர்களும், மாநில பேரிடர் மீட்புக்குழுவினரும், மேற்கண்ட பகுதிகள் என்றில்லாமல், மழைநீர் தேங்கி நின்ற பகுதிகளில் களப்பணியில் இறங்கினர்.. தேங்கி நின்ற நீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.. அந்தவகையில், மாநகராட்சியும் அரசும் சிறப்பாக மீட்பு பணியை கையாண்டது சென்னைவாசிகளை ஈர்த்திருந்தது.

இதனிடையே, இந்த மழையை வைத்து, இன்னமும் மீம்ஸ்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.. "இப்ப மழை, பஜ்ஜி, ராஜான்னு chennairains# ஸ்டேட்ஸ் போட வேண்டியது, இன்னும் ரெண்டு நாள் மழை வந்தா, ஹெலிகாஃப்டர்ல வந்து எனக்கு பிரட் போடு, பிஸ்கட் போடுன்னு pray for chennai#-ன்னு போட வேண்டியது

விடியல் ஆட்சியா: "வரலாறு காணாத மழைன்னு வானிலை ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் சொல்றாங்க.. ஆனா எங்கியுமே தண்ணி நிக்கலயே. இதுதான் திராவிட மாடலா? விடியல் ஆட்சியா? யார ஏமாத்த பாக்குற. ஏய் மோசக்காரா chennairains#

ஆபீஸ் போற குழந்தைக்கெல்லாம் லீவு இல்லையாமே, ஒரு 10 நிமிஷம் ஸ்டாப் ஆனா ஆபீஸ் போயிடுவேன்.. நிக்க மாட்டேங்குதே.. ரொம்ப கவலையா இருக்கு மாமே என்றெல்லாம் மீம்ஸ்கள் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.





அடுத்த அறிவிப்பு: இந்நிலையில், மழை தொடரும் என்ற அடுத்த செய்தியும் வெளியாகி உள்ளது.. குறிப்பாக இன்றும் வட தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்வீட்டிலும், "மழை மேகங்கள் உள்ளே நகர்கின்றன. நேற்று (ஜூன் 18 இரவு) இரவு போல் இல்லை. விட்டு விட்டு மழை தொடரும்" என்று பதிவிட்டுள்ளார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங்












Click it and Unblock the Notifications