கேட்டா தேசதுரோகின்னு சொன்னாங்க.. அதான் கேக்கறத விட்டுட்டோம்.. நீங்க எப்டி.. தேச துரோகி ஆயிடறீங்களா?
டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் 21வது நாளாக நீடிக்கும் நிலையில் அதனை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதை கலாய்த்து மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை: டெல்லியில் விவசாயிகள் நடத்துக் போராட்டம் 21வது நாளை எட்டியுள்ளது. அவர்களுக்கு தமிழக விவசாயிகள் மட்டுமின்ற பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளைச்சேர்ந்த விவசாயிகளும் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் பிரதமர் மோடி இதுவரை தமிழக விவசாயிகள் குறித்து வாய் திறக்கவும் இல்லை. அவர்களை சந்திக்கவும் இல்லை.
இதுகுறித்தும் விவசாயிகள் குறித்து கேள்வி கேட்பவர்களையும் பாஜக நிர்வாகிகள் தேசத் துரோகிகள் என கூறுவதைக் கண்டித்துங்ம ஏராளமான மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
தூக்கில் தொங்க தயாரா?
எனக்கு ஆடி காரும் 100ஏக்கரும் இருப்பதாக நிரூபித்தால் நான் தூக்கில் தொங்க தயார்.. இல்லையென்றால் பாஜகவினர் தூக்கில் தொங்க தயாரா?
வெள்ளைக் கொடி காட்ட வேண்டியதுதான்
வேறு வழியில்லை வெள்ளை கொடி காட்டி போராட்டத்தை வாபஸ் வாங்க சொல்ல வேண்டியதுதான்... என சொல்கிறது இந்த மீம்
மோடிக்கு மட்டும் போகல
சீன நாளிதழில் கவர் ஸ்டோரியாக தமிழக விவசாயிகளின் டெல்லி போராட்டம்.. மோடிக்கு மட்டும்தான் இன்னும் நியூஸ் போய் சேரல... என்கிறது இந்த மீம்..
தேச துரோகி ஆயிடறீங்களா?
ஆரம்பத்துல நாங்களும் இதெல்லாம் கேட்டோம்.. கேள்வி கேட்டா தேசதுரோகின்னு சொன்னாங்க.. அதான் கேக்கறத விட்டுட்டோம்... நீங்க எப்டி.. தேச துரோகி ஆயிடறீங்களா?? இல்ல அமைதியா வேடிக்கை பாக்குறீங்களா???
குரல் கொடுக்க தயங்குறீங்க?
ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுத்த நீங்க ஏன்யா விவசாயிகளுக்கு குரல் கொடுக்க தயங்குறீங்க... என இளைஞர்களை கேட்பதாக உள்ளது இந்த மீம்...