என்னடா நடக்குது இங்க? பிக்பாஸ் வீடு முழுக்க நிறைந்த இன்ஸ்டாகிராம் வாசிகள்!
சென்னை: விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான "பிக்பாஸ்" தற்போது தனது ஒன்பதாவது சீசனுடன் திரையுலகையும், ரசிகர்களையும் மீண்டும் கவர முயல்கிறது. ஆனால், இந்த முறை ஆரம்பம் கொஞ்சம் மந்தமாகத் தோன்றுகிறது என்று சொல்லலாம்.
பொதுவாக, ஒவ்வொரு சீசனின் தொடக்கத்திலேயே ரசிகர்கள் சிலரை "இவர் தான் எனக்கு பிடித்தவர்" என்று தேர்வு செய்து விடுவார்கள். ஆனால் இந்த தடவை, அப்படியான ஒரு உணர்வு மக்களிடத்தில் இன்னும் உருவாகவில்லை. அதற்கு மாறாக, "ச்ச்... இவங்களா? இவர்களை யார்டா உள்ளே விட்டா?" என்ற கேள்விதான் பெரும்பாலோரின் மனதில் கேட்கப்படுகிறது.

பிக்பாஸ் என்றால் சண்டை, சமாதானம், சிரிப்பு, கண்ணீர் என இவை அனைத்தும் கலந்து ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பாக உள்ளது. வீட்டுக்குள் நடக்கும் ஒவ்வொரு விஷயமும், வெளியில் வாழும் நம் சமுதாயத்தின் பிரதியைப் போலவே இருக்கும். அதனால்தான், இந்த நிகழ்ச்சி வருடந்தோறும் மக்கள் மத்தியில் பேசப்படும் முக்கிய விஷயமாக மாறுகிறது.
ஆனால் இந்த முறை, பல இன்ஸ்டாகிராம் முகங்களும், எதிர்பாராத சேர்க்கைகளும் இருப்பதால் , அந்த 'ஸ்பார்க்' இன்னும் ரசிகர்களை கவரவில்லை. இருப்பினும், பிக்பாஸ் என்பதால் எப்போதும் ஒரு திருப்பம் எதிர்பார்க்கலாம். இன்னும் சில நாட்களில், "இவங்களா?" என்பதிலிருந்து "இவர்தான்!" என மக்கள் மனநிலை மாறுமா? அதுதான் இப்போது பார்க்க வேண்டிய விஷயம்.





















Click it and Unblock the Notifications