ஏ.. கேட்டுச்சா.. இதனாலதான் ஜல்லிக்கட்டை நடத்த முடியாமப் போச்சாம்!
சென்னை: "அம்மா" ஸ்டிக்கரை வைத்துத் தனித் தனியாக கலாய்த்தது போக இப்போது ஜல்லிக்கட்டையும் சேர்த்து வைத்து கலாய்த்து வருகிறது நெட் உலகம்.
குங்குமப் பொட்டின் மங்கலம் என்று பாடிய தலைவரின் வழி வந்த ஆட்சி அல்லவா.. அந்த தொட்ட குறை விட்ட குறை போய் விடக் கூடாது என்பதற்காகவோ என்னவோ "அம்மா" படத்தைப் போட்டு ஸ்டிக்கர் அடித்து அமர்க்களப்படுத்தி விட்டனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
என்ன பிரச்சினைன்னா, வெள்ளத்தில் சிக்கிப் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு ஊர்களிலிருந்து வந்த பொருட்களை எல்லாம் பிடித்துப் பறித்து அதில் அந்த ஸ்டிக்கரை ஒட்டி அசிங்கப்பட்டு விட்டார்கள்.
இப்போது அந்த ஸ்டிக்கர் ஜல்லிக்கட்டையும் விடவில்லை பாருங்க.. ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் பிரதமருக்குப் போகவே இல்லையாம்.. காரணம் இதுதானாம்!
Google +😀 pic.twitter.com/Pax5Zvb10q
— தென்மாவட்ட தமிழச்சி✨ (@IAMthamizh1) January 19, 2016 ஒரு வேளை இப்படியும் இருந்தாலும் இருக்கலாமோ!












Click it and Unblock the Notifications