அஞ்சான் படம் ஆஸ்கார் வாங்கிடுச்சுன்னு சொல்லுவீங்களே
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதல் அதை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து டுவிட்டரில் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.
பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது 15 பிரபலங்கள் வெளியுலகம் துண்டிக்கப்பட்டு பிக்பாஸ் வீட்டில் 100 நாள்களுக்கு தங்கியிருப்பர். இதில் கடைசி வரை பிக்பாஸ் வீட்டில் தங்கும் போட்டியாளரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவர்.
இந்த நிகழ்ச்சியில் இருந்து அனுயா, கஞ்சா கருப்பு வெளியேற்றப்பட்டனர். ஸ்ரீ அவராகவே விலகி விட்டார். ஆர்த்தி, காயத்ரி ஆகியோர் ஜூலியானாவை படாதபாடு படுத்துவது மக்களிடையே கடுப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது பரணியை அழ வைக்கும் வேலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
|
நானெல்லாம் பணக்காரன்
Luxury Budget la இட்லி மாவை பார்த்ததும் தான் அதை டெய்லி சாப்பிடற நானெல்லாம் எவ்ளோ பணக்காரன்னு தெரியுது என்கிறார் இந்த நெட்டிசன்.
|
கோள்மூட்டுவதை பார்த்து...
தன் காலத்துக்கு பிறகு தன் மகள் எப்படி வாழ்வார் என்பதை பார்க்க விரும்பினாராம் ஆர்த்தியின் அப்பா.இப்படி பாலிடிக்ஸ் செய்து கோள்மூட்டி வாழ்வதை பார்த்து மகிழ்வார் என்கிறார் இந்த வலைஞர்.
|
கேக்குறவன் கேணையனா...
கேக்குறவன் கேணையனா இருந்தா சூர்யா நடிச்ச அஞ்சான் படம் ஆஸ்கார் வாங்கிடுச்சுன்னு சொல்லுவீங்களே.
|
குதிக்க வச்சுட்டீங்களே
அடப்பாவிங்களா பரணிய ஒதுக்கி ஒதுக்கி சுவர் எகிறி குதிக்க வைச்சிடீங்களேடா...
|
பிக்பாஸே வேண்டாம்
பரணியை வெளியேற்றிவிட்டால் பிக்பாஸ் நிகழ்ச்சியையே ரத்து செய்யுங்கள். பிக்பாஸில் வெற்றி பெற அவரே தகுதியானவர்.












Click it and Unblock the Notifications