அக்கவுண்ட்ஸ் பார்த்து டேலி செய்து ஓட்டுக்கு காசு கொடுத்த ஒரே கோஷ்டி நம்ம சின்னம்மா கோஷ்டி தான்...!
ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதை வைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் நக்கல் அடித்து வருகின்றனர்.
சென்னை: ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் புதன்கிழமை இடைத்தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தன.
இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் சிக்கியதையடுத்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் நேற்றிரவு அறிவித்தது. இந்த அறிவிப்பு வந்த பிறகு மீம்ஸ்களை உருவாக்க நெட்டிசன்கள் தனி கேர் எடுத்துக்கொண்டனர்.
அதில் வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து அவர்கள் மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் சில..
இந்தியாவுலையே ஏன் இந்த உலகத்துலையே அக்கவுண்ட்ஸ் பார்த்து டேலி செய்து ஓட்டுக்கு காசு கொடுத்த ஒரே கோஷ்டி நம்ம சின்னம்மா கோஷ்டி தான்...!
பேரு, போன் நம்பர், அட்ரஸ் எல்லாம் தெளிவா போட்ருக்காங்கைய்யா... வருமான வரித்துறை கைப்பற்றிய ஆவணங்களில் இருந்த அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் விஜயபாஸ்கரின் தகவல்களை வைத்து இந்த மீம் வெளியிடப்பட்டுள்ளது.