எச்சூஸ்மி.. அது கொசு அடிக்கிற பேட் சார்!
சென்னை: ஒலிம்பிக்கிற்காக ரூ. 100 கோடி செலவு செய்துள்ளதாக மத்திய அரசு கணக்கு காட்டியுள்ள இதே நேரத்தில் ரியோவில் இந்திய அதிகாரிகள் குடிப்பதற்கு தண்ணீர் கூட தரவில்லை என இந்திய தடகள வீராங்கனை ஜெய்ஷா குற்றம் சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, கடந்த ஆண்டுகளை விட அதிகமானவர்களை அனுப்பியும் அதிக மெடல்களைக் குவிக்க முடியவில்லை இந்திய விளையாட்டு வீரர்களால் என்ற ஆதங்கத்தில் மக்கள் இருந்து வருகின்றனர்.
எனவே, தங்களது புண் பட்ட மனதை மீம்ஸ் போட்டு ஆற்றி வருகிறார்கள் நெட்டிசன்கள்.
அப்படியாக நம் கண்ணில் பட்ட சில சுவாரஸ்யமான மீம்ஸ்கள் உங்களுக்காக...

எச்சூஸ்மீ...
ஒலிம்பிக்கில் சிந்து வெள்ளிப் பதக்கம் வாங்கியதில் இருந்து நம்மூரில் பலருக்கு கொசு அடிக்கும் மட்டை கூட பேட்மிண்டன் பேட் போலத் தான் தெரிகிறது.

தண்ணி வைங்கப்பா...
தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதியைக் கூட செய்து தராமல், பதக்கம் மட்டும் வேண்டும் என கேட்கும் அரசிற்கு சவுக்கடி தருகிறது இந்த மீம்ஸ்.

தண்ணி வைக்கலையே...
ரியோ ஒலிம்பிக்கில் இந்திய அதிகாரிகள் குடிப்பதற்கு தண்ணீர் கூட தரவில்லை என்ற இந்திய தடகள வீராங்கனை ஜெய்ஷாவின் குற்றச்சாட்டைப் பிரதிபலித்துள்ளது இந்த மீம்ஸ்.

நீ பேசாத...
ரியோ ஒலிம்பிக்கில் இரண்டு பெண் வீராங்கனைகள் பதக்கம் பெற்று இந்தியாவைப் பெருமைப்பட வைத்துள்ளனர். இதை வைத்து இதுவரை பெண்களை இழிவாக பேசி வந்த ஆண்களுக்கு சவுக்கடி தருகிறது இந்த மீம்ஸ்.












Click it and Unblock the Notifications