அய்யோ அப்படியே நீங்க இடிச்சுப்புட்டாலும் நாங்க அப்படியே அசந்துதான் போயிடுவோம்..!
தி சென்னை சில்க்ஸில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 அடுக்குமாடிக் கட்டடம் எலும்புக்கூடாய் ஆனது.
சென்னை: தி சென்னை சில்க்ஸில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து சுமார் 30 மணி நேரத்திற்குப் பிறகு அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் 7 அடுக்குமாடிக் கட்டடம் எலும்புக்கூடாய் ஆனது.
இதில் கடையில் இருந்த 100 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பொருட்கள் தீக்கிரையானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடையை இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சென்னை சில்க்ஸ் தீ விபத்து குறித்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..
|
சென்னை மீது கோபம்
முதலில் தண்ணீர்(வெள்ளம்).. அடுத்து காற்று(வர்தா).. இப்போது தீ.. கடவுளின் கோபம் சென்னை மீது தொடருகிறது என்கிறார் இந்த நெட்டிசன்..
அசந்துதான் போயிடுவோம்
அய்யோ அப்படியே நீங்க இடிச்சுப்புட்டாலும் நாங்க அப்படியே அசந்துதான் போயிடுவோம்.. இதுவரைக்கும் சுமார் 1000 கட்டடத்தை இடிச்சு இருப்பீங்க..
|
விபத்துகளுக்கு பின் விதிகள்
விபத்துக்களை தடுக்கவே விதிகளை உருவாக்குவோம் இங்கு விபத்துக்கள் உருவான பின்பு விதிகளை தேடிக்கொண்டுள்ளார்கள்... என்கிறார் இந்த நெட்டிசன்..
|
அரசின் இன்றைய நடைமுறை...!
விபத்து நடந்த பிறகு விதிமுறைகளை ஆராய்வதுதான் அரசின் இன்றைய நடைமுறை...!! என்கிறார் இந்த வலைஞர்
|
அரசாங்கமும் சேர்ந்தே செய்ததோ?
ஒரு வேலை விதி மீறல்களை அரசாங்கமும் சேர்ந்தே செய்ததோ என்கிறது இந்த மீம்...
|
காத்துட்டு இருந்தோம்..
இல்ல... எரிஞ்சு தானா அந்த எக்ஸ்ட்ரா மூணு மாடி கீழ விழட்டும்னு காத்துட்டு இருந்தோம்... என்கிறது இந்த மீம்..












Click it and Unblock the Notifications