பணம் உள்ள வரும்போது 10கிமீ ஸ்பீட்ல வருது.. வெளில போகும்போது 200கிமீ ஸ்பீட்ல போகுதே!
சென்னை : மாதக்கடைசி வந்து விட்டாலே கையில் காசில்லை என மீம்ஸ் போட்டு புலம்புவதுதான் மாதச்சம்பளக்காரர்களின் வழக்கமாகி விட்டது. இப்போதும் அப்படித்தான் சமூகவலைதளப் பக்கங்களில், 'பணம் உள்ள வரும்போது ஸ்லோவா வருது.. ஆனா செலவாகும்போது ஸ்பீடா ஆகுதே' என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
பணம் இல்லாமல் வாழ முடியாது என்ற அளவிற்கு குடிக்கும் தண்ணீர் முதற்கொண்டு எல்லாவற்றையும் காசு கொடுத்து வாங்கும் சமூகத்தில்தான் தற்போது நாம் வாழ்ந்து வருகிறோம். ஆனால் செலவிற்கேற்ற வருமானம் இருக்கிறதா என்றால், நிச்சயமாக இல்லை. இதில் மாதச்சம்பளக்காரர்களின் பாடுதான் பெரும்பாடு.
சம்பளம் வாங்குவதற்கு முன்பு எப்படி பர்ஸ் காலியாக இருந்ததோ, அதேமாதிரிதான் சம்பளம் வாங்கிய பிறகும் அவர்களுக்கு இருக்கும். 'கையில வாங்குனேன்.. பையில போடல.. காசு போன இடம் தெரியல..' எனப் பாட்டு பாடும் அளவிற்கு, ஊரெல்லாம் இஎம்ஐயும், கடனும் வாங்கி வைத்திருப்பார்கள். வாங்கிய சம்பளத்தை கடன்காரர்களிடம் கொடுத்து விட்டு, பிறகு யாரிடம் மீண்டும் கடன் வாங்கலாம் எனத் தேடிக் கொண்டிருப்பார்கள்.
இப்படி பணத்தைத் தேடி அவர்கள் படும் பாட்டை மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளங்களில். சைடுகேப்பில் கருங்காலி மாலை வாங்கியவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் என்ற கவலை வேறு.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...























Click it and Unblock the Notifications