கடலிலே மழை வீழ்ந்த பின் எந்த துளி மழை துளி.. ஓபிஎஸ் அறிவிப்புக்கு ஓ போட்டு வரவேற்கும் நெட்டிசன்கள்
சென்னை: முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அறிவித்ததற்கு சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் மீம்ஸ்கள் போட்டு தெறிக்கவிட்டு வருகிறார்கள்.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்ற நீண்ட இழுபறிக்கு இன்று அதிமுக விடை அளித்துள்ளது. அதன்படி முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை ஓபிஎஸ் அறிவித்தார்.
ஓபிஎஸ்- ஈபிஎஸ் இடையே பனிப்போர் நிலவி வரும் நிலையில் இத்தகைய முடிவை எடுத்த ஓபிஎஸ்ஸின் மனநிலை எப்படி இருக்கும் என காமெடியாக நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளார்கள்.

கலந்திட்டேன் காதலி
காதல் வந்து தீண்டும் வரை
இருவரும் தனித் தனி
காதலின் பொன் சங்கிலி
இணைத்தது கண்மணி
கடலிலே மழை வீழ்ந்த பின்
எந்தத் துளி மழைத் துளி
காதலில் அது போல நான்
கலந்திட்டேன் காதலி

முதல்வர் வேட்பாளர்
அடுத்த ஆண்டு தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்தார் துணை முதல்வர்.

ஆசை
ஓபிஎஸ்ஸின் ஆசையை நிறைவேற்றியது முதல்வர், முதல்வரின் ஆசையை நிறைவேற்றியது துணை முதல்வர். இருவருக்கும் நல்வாழ்த்துகள்.

அதிமுக நிர்வாகிகள்
அவசர அவசரமாக அறிவிப்புகளை பார்த்தாலே தெரிகிறது. யாருடைய வருகையோ அதிமுக நிர்வாகிகளுக்கு நடுக்கத்தை கொடுத்துவிட்டது.

ட்வீட்
நம்மில் ஒருவர், நமக்கான தலைவர் என்கிறார் இந்த வலைஞர்.












Click it and Unblock the Notifications