வர வர அதிமுக அமைச்சர்கள் தானா இவர்கள் என்ற சந்தேகம் எழுகிறது?
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்கள் மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வருவதை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.
சென்னை: பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்கள் மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அமைச்சர் ஏன் கலப்படம் செய்யும் பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் எதிர்க்கட்சித் தலைவரை போல் குற்றம் சாட்டி வருகிறார் என எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
கடந்த ஒரு வாரமாக அமைச்சர் தனியார் பால் நிறுவனங்களை கட்டம் கட்டித் தாக்கி வருகிறார். பால் முகவர்களையும் போறப்போக்கில் போட்டுத் தாக்கி வருகிறார்.
இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏன் கலப்படம் செய்யும் தனியார் பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கலாய்க்க தொடங்கியுள்ளனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..
— Karthigaichelvan S (@karthickselvaa) May 29, 2017 |
தமிழ்படம் போலிருக்கிறது..
தற்போது அமைச்சரின் நடவடிக்கைகள் தமிழ் படத்தைப் போல் உள்ளது என்கிறார் இந்த நெட்டிசன்...
|
நானும் அமைச்சர்..
அதுமட்டுமில்லாது நானும் ரவுடிதான் பாணியில் நானும் அமைச்சர் என்று மக்களிடம் நெருங்கும் முயற்சி தெரிகிறது.. என்கிறார் இந்த நெட்டிசன்..
|
சந்தேகம் எழுகிறது..
வர வர அதிமுக அமைச்சர்கள் தானா இவர்கள் என்ற சந்தேகம் எழுகிறது? என்கிறார் இந்த நெட்டிசன்..
|
குளோசப் போட்டோ போடுங்க..
இன்னும் கொஞ்சம் குளோசப் போட்டோ போடுங்க அப்பத்தான் பயப்புடுவாங்க என்கிறார் இந்த நெட்டிசன்...
|
அரசுக்கு அதிகாரமில்லையா?
என்ன முட்டாள்தனம்? நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரமில்லையா? ஏன் அமைச்சர் இன்னும் தனியார் பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார் இந்த நெட்டிசன்...
|
எந்த நிறுவனம்..??
அமைச்சர் எந்த தனியார் பால் நிறுவனத்துக்கு எதிராக செயல்படுகிறார்..!! என்கிறார் இந்த நெட்டிசன்...












Click it and Unblock the Notifications