அடி தாங்க முடியலையே... தமிழிசையை ஓட்டும் நெட்டிசன்ஸ்!
மெர்சல் விவகாரம் சுபமாக முடிந்து விட்டது என கூறிய தமிழிசையை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
சென்னை: மெர்சல் விவகாரம் சுபமாக முடிந்து விட்டது என கூறிய தமிழிசையை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா மற்றும் மருத்துவர்களை குறித்து விமர்சித்ததாக பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசை குறைகூறும் காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் எச் ராஜா உள்ளிட்டோர் வலியுறுத்தி வந்தனர்.
இது பாஜகவின் சர்வாதிகாரம் என பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தர ராஜன் மெர்சல் விவகாரம் சுபமாக முடிந்ததாக கூறினார். இதனை வச்சு செய்துள்ளனர் நெட்டிசன்கள்..
|
முடியலையே
அடி தாங்க முடியலையே... என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்
|
படிந்துவிட்டது
அய்யோ அய்யோ... பேரம் படிந்துவிட்டது.. என கிண்டலடிக்கிறார் இந்த வலைஞர்
|
சங்குதான்..
ஆம் முடிந்துவிட்டது. பாஜகவிற்க்கு இருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பும் முடிந்து விட்டது.. இனி உங்க கட்சிக்கு தமிழ்நாட்டில் சங்குதான்.. என்கிறது இந்த டிவிட்
|
கிடையாதுடா..
எனக்கா என்ட் கார்டு போடுறீங்க ... எனக்கு என்டேகிடையாது டா என்கிறது இந்த டிவிட்
|
சொல்றாக அக்கா...
ஹாஹாஹாஹா டேய் போன் பண்ணாதிங்கனு சொல்றாக அக்கா... என கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்..