ஜெ. கொண்டை ஊசியை கூட ஆட்டையை போட்ட சசி போயஸ் கார்டன் வீட்டு பக்கம் கூட போக முடியலையே!
சசிகலா பரோலில் வெளி வந்திருப்பது குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: சசிகலா பரோலில் வெளி வந்திருப்பது குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் தனது கணவர் நடராஜனை காண சசிகலா 5 நாட்கள் பரோலில் வந்துள்ளார். அவர் தி நகரில் உள்ள இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கியுள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ஏராளமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..
|
பாவம் பேரறிவாளன்
சசிகலா சஞ்சய் தத் இவங்களுக்கெல்லாம் டக்குனு பரோல் கிடைக்குதே. பாவம் பேரறிவாளன். 26 வருடங்கள் ஆச்சு வெளியுலகைப் பார்க்க... என்கிறார் இந்த நெட்டிசன்..
|
தோழா ஏழை நமக்காக
புத்தன், ஏசு, காந்தி, சசிகலா பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக.. என கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்
|
புதிய கூட்டணியா?
திமுக வினருக்கு சசிகலா மீது ஏன் திடீர் பாசம். புதிய கூட்டணியா? என கேட்கிறார் இந்த வலைஞர்
|
போக முடியலையே
அம்மா வீட்டில் இருக்கும் கொண்டை ஊசியை கூட ஆட்டையை போட்ட சசிகலா போயஸ் கார்டன் வீட்டு பக்கம் கூட போக முடியலையே.. என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்..












Click it and Unblock the Notifications