நாங்க நம்பீட்டோம் இது மக்களுக்கான #பட்ஜெட்2018.. கடுப்பாகும் நெட்டிசன்ஸ்
மத்திய அரசின் பொது பட்ஜெட்டில் எதிர்ப்பார்த்த அளவுக்கு சலுகைகள் அறிவிக்கப்படாதது குறித்து நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
டெல்லி: மத்திய அரசின் பொது பட்ஜெட்டில் எதிர்ப்பார்த்த அளவுக்கு சலுகைகள் அறிவிக்கப்படாதது குறித்து நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அரசின் கடைசி பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்தார். ஆனால் இந்த பட்ஜெட் சமானிய மக்களுக்கும் மாத சம்பளதாரர்களுக்கும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பட்ஜெட் குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில..
|
நாங்க நம்பீட்டோம்
நாங்க நம்பீட்டோம் இது மக்களுக்கான #பட்ஜெட்2018
|
ஒருவரை ஒருவர் பார்த்து..
பட்ஜெட்டின் போது பக்தாஸ் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட காட்சி..
|
வேற ஏதாவது சொல்லுங்க..
பட்ஜெட் 2018 அனைத்து மாநிலங்களிலும் மெடிக்கல் காலேஜ்
தமிழகம் ஏற்கனவே ஒரு மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி கொள்கையை கொண்டிருக்கிறது.. வேற ஏதாவது சொல்லுங்க..
|
வேட்டியும் சேர்ந்து விழுது
ஸ்கூல் பீஸ், மளிகை, மருத்துவம், வரி செலுத்துறதால குடும்ப பட்ஜெட்ல துண்டு விழுது. குடியரசுத்தலைவர், துணைக்குடியரசுத்தலைவர், ஆளுநர், எம்பி, நீதிபதி சம்பள உயர்வால நாட்டு பட்ஜெட்ல வேட்டியும் சேர்ந்து விழுது. வேடிக்கை என்னன்னா வேட்டி விவசாயிகளோடது
|
ஏழை என்ற வார்த்தையே..
எல்லாத்துக்கும் கோடி கணக்கில் ஒதுக்கீடுனு சொல்ற நீங்க அத சரியான முறையில மக்கள் கிட்ட எடுத்திட்டு போறீங்களா அப்படி ஒதுக்கீடு பன்ன பணம் ஒவ்வொரு ஏழைக்கும் பயன்பட்டு இருந்தா ஏழை என்ற வார்தையே தமிழ் அகராதில இல்லாம போகி இருக்கும்.