ஐய்யோ இப்பவே கண்ண கட்டுதே! #Rajinikanth
நடிகர் ரஜினிக்காந்த் அரசியலுக்கு வருவது உறுதி அறிவித்துள்ள நிலையில் அதுகுறித்து சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: நடிகர் ரஜினிக்காந்த் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்துள்ள நிலையில் அதுகுறித்து சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்தனர். இந்நிலையில் ரஜினி இன்று தனது அறிவிப்பை வெளியிட்டுவிட்டார்.
அரசியலுக்கு வருவது உறுதி என அவர் திட்டவட்டமாக கூறிவிட்டார். இதுகுறித்து சமூகவலைதளங்களில் ஏராளமான கருத்துக்கள் குவிந்து வருகின்றன. அவற்றில் சில..
|
இது ஒரு பேரிடி
ஆன்மீக அரசியல் முன்னெடுத்து செல்வேன்
#ரஜினிகாந்த்
#வாழ்த்துக்கள் ....
#வரவேற்கிறேன் ....
போலி தமிழ் வருடிகளுக்கு இது ஒரு பேரிடி... என்கிறது இந்த டிவிட்
|
ஓ வசந்த் & கோ விளம்பரமா
உண்மை. உழைப்பு.. உயர்வு... இதுவே மந்திரம்: ரஜினிகாந்த்
ஓ வசந்த் & கோ விளம்பரமா என கேட்கிறார் இந்த வலைஞர்
|
செஞ்சுறுவாரு...
தனது முழு ஆதரவையும் Next CM ரஜினிகாந்த் அவர்களுக்கு தருவதென கிங்மேக்கர் வைகோ முடிவு.. யாருகிட்ட வந்து யாரு சீன் போடுறது. செஞ்சுறுவாரு... என கலாய்க்கிறது இந்த நெட்டிசன்..
|
இதைத்தான் எதிர்பார்த்தேன்
1. மற்ற அரசியல்வதிகளை குறை சொல்லக் கூடாது
2. செய்ய முடியாததை வாக்குறுதியாக தர கூடது
3..சொன்னதை செய்ய முடியாதபோது ராஜினாமா செய்வேன்... ரஜினிகாந்த்
புதிதாக அரசியலுக்கு வருவோரிடம் நான்
இதைத்தான் எதிர்பார்த்தேன்... வருக! என்கிறார் இந்த நெட்டிசன்
|
இப்பவே கண்ண கட்டுதே
ரஜினிகாந்த் அரசியல் வாரிசு யாரு தனுஷ்..ஐய்யோ இப்பவே கண்ண கட்டுதே.. என்கிறார் இந்த வலைஞர்












Click it and Unblock the Notifications