டேய் என்னடா நடக்குது இங்க? தமிழ் இனி மெல்ல சாகும்னு சொல்ல வரிங்களா??
டிஎன்பிஎஸ்சி மூலம் வெளிமாநிலத்தவர் வேலை பெறலாம் என்ற தமிழக அரசின் விதிமுறைக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் வெளிமாநிலத்தவர் வேலை பெறலாம் என்ற தமிழக அரசின் விதிமுறைக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் இனி வெளி மாநிலத்தவரும் அரசு வேலை பெறும் வகையில் டிஎன்பிஎஸ்சியின் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நீட் தேர்வால் மருத்துவப் படிப்பு கனவு தவிடுபொடியான நிலையில் தற்போது அரசு வேலையும் எட்டாக்கனியாகிவிடும் என வேதனை தெரிவித்து வருகின்றனர்.
|
குடும்பங்களை கடலில் தள்ளுவீர்?
வெக்கமா இல்லையா ஆட்சியாளர்களே?
உங்கள் கள்ளப்பணம் கரைசேர்க்க எத்தனை தமிழர் குடும்பங்களை கடலில் தள்ளுவீர்? என கேட்கிறார் இந்த நெட்டிசன்
|
உங்களுக்குத்தான் ஓட்டு
டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணைக்கு எதிரா ஒரு குரல் கொடு ஆண்டவரே பாக்கலாம், நீங்க கட்சி ஆரம்பிச்சா நான் சாகுறவரைக்கும் உங்களுக்குத்தான் ஓட்டு... என்கிறார் இந்த நெட்டிசன்
|
திருவள்ளூவர் சொல்லிருக்கார்
இதை தான் எங்க அய்யன் திருவள்ளுவர் அப்பவே பாட்டா பாடி வச்சிருக்காரு...
" இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. " என்கிறார் இந்த வலைஞர்..
|
எவ்ளோ கஷ்டப்படுறாங்க?
தமிழை அழிக்கனும்னு இந்த ஹிந்திகாரங்க தான் எவ்ளோ கஷ்டப்பட வேண்டி இருக்கு? என கேட்கிறார் இந்த நெட்டிசன்.
|
இந்தியில் டிஎன்பிஎஸ்சி தேர்வு
சீக்கரத்துல டிஎன்பிஎஸ்சி தேர்வ ஹிந்திலயும் நடத்துவாங்க போல.! என்கிறார் இந்த நெட்டிசன்
|
விடமாட்டோம்..
டேய் என்னடா நடக்குது இங்க? தமிழ் இனி மெல்ல சாகும்னு சொல்ல வரிங்களாடா?? . . . .. நான் இல்லடா . . . என் பையன் . . . . என் பேரன் காலத்திலும் விட மாட்டோம் !!! என கொந்தளிக்கிறார் இந்த வலைஞர்












Click it and Unblock the Notifications