விவசாயிகளிடம் பெற்ற கடன்.. நம் உடலே சாட்சி..! கமல் டிவிட்டுக்கு ரசிகர்கள் வரவேற்பு
விவசாயிகளின் குரலுக்கு வலுசேர்க்க நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்திருப்பதை அவரது ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.
சென்னை: விவசாயிகளின் குரலுக்கு வலுசேர்க்க நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்திருப்பதை அவரது ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.
விவசாயிகளின் குரலுக்கு வலுசேர்க்க நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். விவசாயிகளுக்கு கடன்படாதவர் யார்? அவர்கள் குரல் வலுப்பெற செய்யுங்கள் என நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
கமலின் அந்த டிவிட்டுக்கு அவரது ரசிகர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அவற்றில் சில
|
சோறுதான் முக்கியம்
கார் நமக்கு முக்கியம் இல்ல.. சோறு தான் முக்கியம் என்கிறார் இந்த நெட்டிசன்
|
வலு சேர்க்க வேண்டும்
சோற்றில் கைவைக்கும் ஒவ்வொருவரும் ஒருவேளையாவது தன் குரல் உயர்த்தி நம் விவசாயிகளுக்கு வலு சேர்க்கவேண்டும்.. என்கிறார் இந்த வலைஞர்
|
விரல் கோர்ப்போம்
விவசாயிகளிடம் பெற்ற கடன் நம் உடலே சாட்சி.....
வாரும் விரல் கோர்ப்போம்.. என்கிறார் இந்த நெட்டிசன்..
|
என்னோட பெருமை
என்னோட அப்பா விவசாயம் பண்றார்ன்னு சொல்றது தான் என்னோட பெருமை ஆண்டவரே.. என்கிறார் இந்த வலைஞர்
|
கட்சிப்பெயர் அறிவியுங்கள்
நிச்சயம் சார்.. சீக்கிரம் அரசியல் கட்சி பெயர் அறிவியுங்கள்.. என்கிறார் இந்த நெட்டிசன்
|
உங்கள் தலைமையில் இருக்க
விவசாயம் சாயம்போகாமல் வாழ இப்போதுள்ள கரைகளை அகற்றவேண்டும், வேட்டியிலிருந்தும் ஆட்சியிலிருந்தும்.அதுவுங்கள் தலைமையிலிருக்க காத்திருக்கிறோம்.. என்கிறார் இந்த வலைஞர்
|
பாதுகாக்க வழிசெய்வோம்..
அரசியல் களம் கண்ட கதாநாயகன்.
தேவையற்ற களைகளை எரித்து நல்ல விதைகளை மட்டும் பாதுகாப்போம்.. நாளை நம் தலைமுறைகளை பாதுகாக்க வழிசெய்வோம்..












Click it and Unblock the Notifications