வீட்டோட மாப்பிள்ளையா போனது தப்பா போச்சி.. ஆடி மாசம்னு வீட்டைவிட்டு துரத்திட்டாங்க!
சென்னை: ஆடி மாதம் பிறந்து விட்டது.. இனி ஒரு மாதத்திற்கு பிரித்து வைத்து விடுவார்களே என்ற கவலையில் புதுமணத் தம்பதிகள் இருக்க, 'ஏம்பா கல்யாணம் ஆகி சிலபல வருசங்கள் ஆனவங்களுக்கெல்லாம் இந்த மாதிரி ஆடி சம்பிரதாயம் எதுவும் இல்லையாப்பா' என மீம்ஸ் போட்டு ஆர்வமாக விசாரித்து வருகின்றனர் குறும்புக்கார நெட்டிசன்கள்.
ஆடி மாதம் பிறந்து விட்டாலே புதுமணத் தம்பதிகளைப் பிரித்து வைத்து விடுவார்கள் என்பது ஊரறிந்த விசயம்தான். ஆனால் ஆடி பிறப்பதற்குள் முகூர்த்தத்தை வைத்துவிட வேண்டும் என ஆனி மாதத்தில் கடைசி முகூர்த்தம் வரை திருமணத்தை நடத்தியவர்கள் நம்மூரில் ஏராளம். அதனால் திருமணம் முடிந்த சில தினங்களிலேயே ஆடி பிறந்துவிட்டது என புதுமணத் தம்பதிகளைப் பிரித்து வைத்துவிட்டனர்.

இது சம்பிரதாயம் என்பதால் மறுக்கவும் முடியாமல், தன் புது மனைவி/கணவரைப் பிரியவும் முடியாமல் பல புதுமணத் தம்பதிகள் ஃபீல் பண்ணிக் கொண்டிருக்க, வழக்கம் போல் 'இந்த மாதிரி சம்பிரதாயம் எல்லாம் கல்யாணம் ஆன முதல் வருசம் மட்டும் தானா? அடுத்தடுத்த வருசமெல்லாம் இந்த ஆஃபர் கிடையாதா?' என கடந்த ஆண்டுகளில் திருமணம் ஆனவர்கள் கூகுளில் சல்லடைப் போட்டு பதிலைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
இப்படியாக இருவேறு கோணங்களில் ஆடி மாதத்தை மக்கள் வரவேற்று வருவதை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஆடி ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...
























Click it and Unblock the Notifications