3 நாள் பொங்கல் லீவு ஓகே.. ஆனா 3 நாள் 3 வேளையும் பொங்கல்தான் சாப்பிடணும்னா.. எப்டிங்க!
பொங்கல் பண்டிகை முடிந்தாலும், வீட்டில் செய்த பொங்கல் இன்னமும் தீரவில்லை என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: பொங்கல் கொண்டாட்டங்கள் முடிந்தாலும் வீட்டில் செய்த பொங்கல் இன்னமும் தீரவில்லை என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

பொங்கல் பண்டிகை என்றாலே நிச்சயம் எல்லோருடைய வீடுகளிலும் சாப்பிடுவதற்கு பொங்கல் செய்வது வாடிக்கை. சர்க்கரைப் பொங்கல் மட்டுமில்லாது, வெண்பொங்கலும் வைப்பார்கள். தீபாவளிக்கு எப்படி பலகாரம் சாப்பிட்டே வயிறு நிறையுமோ, அதை மாதிரி பொங்கலுக்கு பொங்கலைச் சாப்பிட்டே ஒரு வழியாகி விடுவோம்.
ஆனாலும் நம் வயிறுதான் நிறையுமே தவிர, பொங்கல் பானை அவ்வளவு சீக்கிரத்தில் காலி ஆகாது. விடுமுறையில் வீட்டில் இருக்கிறோம், விதவிதமாகப் பலகாரம் செய்து தருவார்கள் என எதிர்பார்ப்பவர்களுக்கு மூன்று நாளும், மூன்று வேளையும் பொங்கல் மட்டுமே சாப்பிடக் கிடைத்தால், நிச்சயம் நொந்து நூடுல்ஸ் ஆகத்தானே செய்வார்கள்.
விருந்தாளியாகப் போகும் இடங்களிலும் பொங்கல் தான் சாப்பிடக் கிடைக்கிறது என்றால், அவர்களது நிலைமையை என்னவென்று சொல்வது. நேரடியாக தங்களது மனக்குமுறல்களை கொட்ட முடியாதவர்கள், மீம்ஸ்களாகப் போட்டு சமூகவலைதளங்களில் புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட பொங்கல் பற்றிய சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...


















Click it and Unblock the Notifications