என்னைப் புதைச்ச இடத்தில் நீ ஆட்சி நடத்தப் போறியே.. நீ சதிகாரி... அன்றே சொன்ன ஜெயலலிதா!
என்னைப் புதைச்ச இடத்தில் நீ ஆட்சி நடத்தப் போறியே நீ சதிகாரி என்று பேசிய ஜெயலலிதா வசனம் வைரலாகப் பரவி வருகிறது.
சென்னை: டிவிட்டரும், பேஸ்புக்கும் அதிரிபுதிரியாக ஓவர் டைம் செய்து கொண்டிருக்கிறது,சசிகலாவை எப்படியெல்லாம் டேமேஜாக்குவது என்பதில். எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு.. வரலாறு காணாத கொதிப்பைக் காண முடிகிறது. மக்களால் கொஞ்சம் கூட டைஜெஸ்ட் செய்ய முடியாதவராக மாறிப் போயிருக்கிறார் சசிகலா.
எந்த வகையிலும் மக்கள் சசிகலாவை ஏற்கவில்லை. பிடிக்காத உணவை எடுத்து வாயில் திணிப்பதைப் போல மக்கள் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதுவரை கொதிப்புடன் பதிவு போடாத பலரும் கூட இப்போது வெறுப்புடன் சசிகலாவை விமர்சித்துப் பதிவுகளைக் குவித்துக் கொண்டுள்ளனர்.
இப்படி ஒரு எதிர்ப்பை யாரும் சமீப காலத்தில் சந்தித்ததில்லை என்பது உண்மை. அந்த அளவுக்கு மக்களின் கோபத்தை வாரிக் கட்டிக் கொண்டிருக்கிறார் சசிகலா. அதிலும் ஜெயலலிதாவை பேசிய ஒரு வசனத்தை வைத்து வந்துள்ள மீம்.. பட்டையைக் கிளப்புகிறது.
|
நீ சதிகாரி..!
அன்சாரி மஸ்தான் போட்டுள்ள இந்த சினிமாப் பட வசனத்தைப் பாருங்க. எப்படி பொருந்திப் போகிறதென்று!
|
முன்பு அப்படி.. இப்போது இப்படி!
முன்பெல்லாம் ADMK ஆட்சில முதல்வர் மாறமாட்டார் அமைச்சருங்க மாறிக்கிட்டே இருப்பாங்க. இப்ப அமைச்சருங்க மாறல, முதல்வர் மாறிக்கிட்டே இருக்காங்க
|
நாறிப் போச்சு போங்க!
தீடீர்னு உங்க வீட்டுக்குள்ள அப்பாஸ் புகுந்து இந்த ஹார்பிக் வாங்குகனு சொன்னா எப்பிடி இருக்குமோ அப்பிடி தான் மக்களும் இருப்பாங்க
|
பாலியோ டயட்டுக்கு மாறுங்கப்பா
Those who oppose Sasikala must embrace Paleo Diet immediately. There Panneer is the Main Course... பன்னீர் தமிழகத்தில் எப்போதுமே ஸ்டாட்டர்தான், மெயின் சாப்பாடு அல்ல என்பது இதன் சாராம்சம்.