For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீ சொன்னா நான் ஏன்டா கேக்கனும்?!

முதல்வர் பதவிக்கு இனி சசிகலா என்று ஓ.பன்னீர் செல்வம் சொன்னால் நாங்கள் ஏன் கேட்க வேண்டும் என்று கேட்டு மீம்ஸ்கள் வலம் வருகின்றன.

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா முதல்வர்.. சாப்பிடக் கூடாத நேரத்தில் சாப்பிடக் கூடாததை சாப்பிட்டு செரிக்காமல் வயிறு வலித்துத் துடிக்கும் நிலையில் மக்கள் உள்ளனர். மீம்ஸ் போட்டு தங்களது மன வேதனையை ஆற்றிக் கொண்டுள்ளனர் மக்கள்.

இதுவரை எந்தத் தலைவருக்கும் இப்படி ஒரு மக்கள் எதிர்ப்பை தமிழ்நாடு பார்த்ததில்லை. ஏன் இந்தியாவே கூட பார்த்ததில்லை என்று கூறும் அளவுக்கு வரலாறு காணாத எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார் சசிகலா. ஆனால் அவரும் சரி, அவரைச் சுற்றியுள்ளவர்களும் சரி, அவரை தலைவராக தேர்ந்தெடுத்துக் கொண்ட அந்தக் கட்சியினரும் சரி இதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்பட்டது போலத் தெரியவில்லை.

மக்களின் மன ஓட்டத்தை சற்றும் மதிக்காமல் பதவியே முக்கியம் என்று அலையும் இவர்களுக்கு மக்களின் மன நிலை எப்படி இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டும் சில சாம்பிள்கள்தான் இந்த மீம்ஸ்கள்.

நீ சொன்னா நான் ஏன்டா கேக்கனும்?

நீ சொன்னா நான் ஏன்டா கேக்கனும்?

நீ சொன்னா நான் ஏன்டா கேக்கனும்.. இதுதான் மக்களின் மன நிலை.. ஆனால் உணர்வார்தான் இல்லை!

சகிக்கலை!

சகிக்கலை!

சசிகலா என்ற பெயரையே சகிக்கலை என்றுதான் பலர் சொல்லி வருகின்றனர். இதுவும் அதைத்தான் வசனம் இல்லாமல் உணர்த்துகிறது பாருங்கள்.

ஒனிடா தலைமுறையை விட மோசமான நிலை

ஒனிடா தலைமுறையை விட மோசமான நிலை

ஒனிடா மண்டையனைப் பார்த்த கடைசித் தலைமுறை நாம்தான் என்று சொல்லி வந்த மக்கள் இப்போது இப்படி புலம்பிக் கொண்டுள்ளனர்.

அடுத்து இதுதானே!

அடுத்து இதுதானே!

எல்லாம் நடந்தாச்சு.. இது மட்டும் நடக்காம போயிருமா என்ன!

English summary
Various memes on Sasikala are on rounds in social media and people are blasting the ADMK and its leaders for selecting Sasikala as their legislature party leader.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X