இது தைமாசம் இல்ல.. மொய் மாசம்.. அம்மாடியோவ்.. எத்தனை கல்யாணப் பத்திரிகை.. மொய் வச்சு தீரலைடா!
சென்னை : தை மாதம் என்பதால் தொடர்ந்து முகூர்த்தங்களாக இருப்பதாகவும், மொய் வைத்து கட்டுப்படியாகவில்லை என்றும் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
தமிழில் முகூர்த்தங்கள் மிகுந்த மாதங்கள் என்றே சில மாதங்களுக்கு தனிச்சிறப்பு உண்டு. அதில், ஐப்பசியும், தையும் முக்கியமானது. இந்த மாதத்தில் இருக்கும் முகூர்த்தங்கள் எல்லாவற்றிலும் மண்டபங்கள் நிரம்பி வழியும். வீட்டிலும் திருமணப் பத்திரிகைகள் குவிந்து விடும். இந்த மாதங்களில் மொய் எழுதுவதற்கென்றே தனியாக ஒரு தொகையை ஒதுக்கிவிட வேண்டும். அந்தளவிற்கு திருமணப் பத்திரிகைகள் வந்து கொண்டே இருக்கும்.
அந்தவகையில், இப்போதுதான் பொங்கல் செலவுகள் முடிந்தது என பெருமூச்சு விடுவதற்குள், இப்படி அடுத்தடுத்து திருமணப் பத்திரிகைகளாக குவிவதால், "இது தைமாசம் இல்ல.. மொய் மாசம்.. அம்மாடியோவ்.. எத்தனை கல்யாணப் பத்திரிகை.. மொய் வச்சு தீரலைடா!" என்றும், "யப்பா டேய்.. இன்னும் எத்தனை முகூர்த்தம்டா இருக்கு.. மொய் வைச்சு தீரலைடா!" என்றும் விதவிதமாக மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நம் மக்கள்.
பொங்கல் விடுமுறை முடிந்து இன்னமும் ஆபிஸ் செல்லும் மோடுக்குள்ளேயே முழுவதுமாக செல்ல முடியாமல் மீம்ஸ் போட்டு புலம்பி வரும் நெட்டிசன்கள், சைடு கேப்பில் இந்த முகூர்த்தங்கள் பற்றியும், அவற்றிற்கு மொய் எழுதி தீரவில்லை என்றும் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





















Click it and Unblock the Notifications