எங்க ADMK உங்க BJP ஆகலாம்! பச்சே உங்க BJP எங்க ADMK ஆகாது சாரே..!
இரட்டை இலை சின்னம் எடப்பாடி- ஓபிஎஸ் அணிக்கு கிடைத்துள்ளது குறித்து நெட்டிசன்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
சென்னை: தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் தற்போது எடப்பாடி - ஓபிஎஸ் அணிக்கு கிடைத்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. இதையடுத்து அதிமுகவின் இரு அணிகளும் இரட்டை இலை சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தை நாடின.
இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதையடுத்து இரு அணிகளும் இணைந்துள்ளதால் டிடிவி தினகரனுக்கு இரட்டை இலை சின்னம் வழங்காமல் எடப்பாடி- ஓபிஎஸ் அணிக்கு நேற்று வழங்கப்பட்டது.
இது குறித்து நெட்டிசன்கள் தெரிவித்த கருத்துகளை தொகுத்து வழங்கியுள்ளோம்.
|
என்ன வாங்கித் தருமோ
ஜெயலலிதா ஆன்மா இன்னும் என்ன என்ன வாங்கி தருமோ..
|
இரு எறும்புகள்
ஒரு இலை ஏற்கெனவே இரு எறும்புகளால் சாப்பிடப்பட்டுவிட்டது.
|
டிவி ஆஃப்
அண்ணே இரட்டை இலை தீர்ப்பு வெளிவராது
எப்படி சொல்றே
நான்தான் டிவிய ஆஃப் பண்ணிட்டேன்ல
|
டீ ஆத்தும் நபர்
யாருமே இல்லாத டீக்கடைக்கு டீ ஆத்தும் ஒருவர்.
|
எங்கள் சின்னம்
உங்கள் புன்னகையே எங்கள் சின்னம்
|
அதிமுக ஜெயிச்சிடும்
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்னு நம்புறதும்,இரட்டை இலை வந்ததும் அதிமுக ஜெயிச்சிடும்னு நம்புறதும் ஒன்னுதான்
|
ஆகாது சாரே
இரட்டை இலையை பெற்றார் எடப்பாடி பழனிசாமி!
(எங்க ADMK உங்க BJP ஆகலாம்! பச்சே உங்க BJP எங்க ADMK ஆகாது சாரே..!)