என்னா மனுஷங்கய்யா.. கொரோனா வாங்க ஆர்வமா இப்டி கூட்டம் கூட்டமா போறாங்களே!
தீபாவளி பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், புதிய உடை வாங்கும் வேலையில் மக்கள் ஆர்வமாக ஈடுபட்டு உள்ளனர்.

சென்னையைப் பொறுத்தவரை எத்தனைப் புதிய கடைகள் முளைத்தாலும், மக்களுக்கு திநகரில் ஷாப்பிங் செய்தால் தான், தீபாவளி தித்திப்பாய் அமையும். இதனாலேயே எந்தப் பண்டிகை என்றாலும் மக்கள் முதலில் கூட்டமாக குவிவது அங்குதான்.

கொரோனா ஊரடங்கு இன்னமும் முழுமையாக விலக்கப்படாமல், கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தளர்த்தப்பட்டு வருகிறது. ஆனால் மக்களோ புதிய மற்றும் பழைய இயல்பு நிலையில், அதாங்க கொஞ்ச பேர் மாஸ்க் அணிந்தும், நிறைய பேர் மாஸ்க்கை மறந்தும் வெளியில் சுற்றி வருகின்றனர். சமூக இடைவெளியையெல்லாம் அவர்கள் காற்றில் பறக்க விடும் இடங்களில் திநகரும் ஒன்று.
இப்போது தான் கொரோனா பரவல் குறைந்து மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டு வருகின்றனர். ஆனால் இப்படி மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் இருப்பதைப் பார்த்தால் கொஞ்சம் பீதியாகத்தான் இருக்கிறது. இந்த பீதியை சமூகவலைதளங்களில் மீம்ஸ்களாக பகிர்ந்து வருகின்றனர் மீமர்கள். இதைப் பார்த்தாவது மக்களுக்கு விழிப்புணர்வு வந்தால் சந்தோசம் தான்...












Click it and Unblock the Notifications