பிரச்சினை சிறிதெனில் சாமியிடம் போய்விடு.. பிரச்சினை பெரியதெனில் சாமியாராகவே போய்விடு!
புலம்பல் மன்னர்களைப் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: எதற்கெடுத்தாலும் புலம்பித் தீர்ப்பவர்களைப் பற்றிய ஜாலி மீம்ஸ்கள் சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
'என்ன வேணா நடக்கட்டும்.. நான் சந்தோசமா இருப்பேன்..' என வெளியில் பாட்டுப் பாடிக் கொண்டு திரிந்தாலும், ஒவ்வொருவர் மனதிற்குள்ளும் ஓராயிரம் கவலைகள் இருப்பது மறுக்க முடியாத உண்மை. இதனை சமயம் கிடைக்கும்போது, எதிரில் பார்ப்பவர்கள் எல்லோரிடமும் புலம்புபவர்கள் ஒரு ரகம் என்றால், மனதிற்கு நெருக்கமானவர்களிடம் மட்டும் புலம்புபவர்கள் மற்றொரு ரகம்.

புலம்பி ஒன்றும் ஆகப் போவதில்லை.. பிரச்சினைகள் தீரப்போவதில்லை என்பது நன்கு தெரிந்திருந்தாலும், அதில் ஒரு ஆறுதல் இருப்பதாக உணர்வதாலேயே மக்கள் இப்படிப் புலம்பித் தீர்க்கிறார்கள். பெரும்பாலும் இப்படியான புலம்பல்களின் கடைசி நிலை தத்துவங்களாகத்தான் இருக்கும்.

இப்படியான புலம்பல் மன்னர்களை வைத்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். இதில் பெரும்பாலான மீம்ஸ்கள் படிப்பவர்களின் மனநிலையோடு ஒத்துப் போவதால், அதனைப் பார்ப்பவர்கள் தங்களது நண்பர்களுக்கும் பகிர்கின்றனர்.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...












Click it and Unblock the Notifications