என் தலைக்கு தில்ல பார்த்தியா! திரிஷாவோடு ஜோடியாக போன விஜய்! தூய சக்தியில்லை.. காம சக்தி என விமர்சனம்
சென்னை: சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் விஜய்யும், நடிகை திரிஷாவும் ஜோடியாக பங்கேற்றிருப்பது, தவெக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே விஜய்யின் மனைவி சங்கீதா, விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறியிருந்தார். இப்படி இருக்கையில்தான் விஜய் திரிஷாவுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்.
சோஷியல் மீடியாக்களில் விஜய் குறித்த பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக, தன்னை தூய சக்தி என்று விஜய் கூறி வந்த நிலையில், விஜய் தூய சக்தி கிடையாது, காம சக்தி என்று சோஷியல் மீடியாக்களில் மீம்ஸ்கள் ஷேராகி வருகின்றன.

முன்னதாக விஜய்யின் மனைவி, சங்கீதா விவாகரத்து கோரி கொடுத்திருந்த மனு அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றிருந்தது. அந்த மனுவில் விஜய் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சங்கீதா குறிப்பிட்டிருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், இந்த திருமணத்தை மீறிய உறவை தான் கண்டுபிடித்திருந்ததாகவும், ஆனால் அப்போது அதை கைவிட்டுவிடுவதாக விஜய் சொன்னதாகவும், ஆனால் இப்போது வரை அப்படி எதையும் செய்யவில்லை என்றும் சங்கீதா கூறியிருந்தார்.

செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில், சங்கீதா தாக்கல் செய்திருந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "கடந்த 2021ம் ஆண்டு விஜய், ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததை நான் கண்டுபிடித்தேன். இது எனது திருமணத்தின் நம்பிக்கையை உடைத்தது.

விஷயம் என்னவெனில், அந்த உறவை விஜய் முறித்துக்கொள்வதாக என்னிடம் உறுதியளித்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக, எந்தவித வருத்தமும் இன்றி, அந்த உறவை விஜய் தொடர்ந்தார்.
அந்த நடிகை, விஜய்யுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்வதும், அதற்கு விஜய் எதிர்ப்பு தெரிவிக்காததும், தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதைவிட முக்கியமான விஷயம் விஜய் என்னை நடத்திய விதம்தான். விஜய் என்னை கடுமையாக நடத்தினார். சண்டைக்கான காரணம் குறித்து பேசியபோது, அதைப்பற்றி பேசுவதை தவிர்த்தார். ஒரு கட்டத்தில் வீட்டின் ஒரு பகுதியிலேயே தன்னை தனிமைப்படுத்தி வாழ வைத்தார்.

எனவே எனக்கு விவாகரத்து வேண்டும். மட்டுமல்லாது விஜய்யின் வருமானம் மற்றும் சமூக அந்தஸ்துக்கு ஏற்ப ஒரு கவுரவமான மற்றும் நியாயமான ஜீவனாம்ச தொகையை தனக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

இந்த வழக்கு முடியும் வரை அல்லது விஜய் தனக்கு ஈடான மாற்று வசதியை செய்து தரும் வரை நீலாங்கரையில் உள்ள தற்போதைய வீட்டிலேயே வசிப்பதற்கான உரிமையை வழங்க வேண்டும். இந்த விவாகரத்து வழக்குக்கான அனைத்து செலவுகளையும் விஜய்யே ஏற்க வேண்டும்.

தேவைப்பட்டால் இந்த வழக்கில் இரண்டாம் எதிர்மனுதாரராக சம்பந்தப்பட்ட நடிகையை இணைக்க தனக்கு உரிமை வேண்டும். எங்களது குடும்ப கவுரவம் மற்றும் குழந்தைகளின் எதிர்க்காலம் கருதி, இந்த வழக்கு விசாரணையை ரகசியமாக, அதாவது கேமரா முன்பு நடத்த வேண்டும். இது குறித்து சோஷியல் மீடியாக்களிலோ, யூடியூப் தளத்திலோ விவாதிக்க அனுமதி மறுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications