என் தலைக்கு தில்ல பார்த்தியா! திரிஷாவோடு ஜோடியாக போன விஜய்! தூய சக்தியில்லை.. காம சக்தி என விமர்சனம்
சென்னை: சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் விஜய்யும், நடிகை திரிஷாவும் ஜோடியாக பங்கேற்றிருப்பது, தவெக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே விஜய்யின் மனைவி சங்கீதா, விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறியிருந்தார். இப்படி இருக்கையில்தான் விஜய் திரிஷாவுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்.
சோஷியல் மீடியாக்களில் விஜய் குறித்த பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக, தன்னை தூய சக்தி என்று விஜய் கூறி வந்த நிலையில், விஜய் தூய சக்தி கிடையாது, காம சக்தி என்று சோஷியல் மீடியாக்களில் மீம்ஸ்கள் ஷேராகி வருகின்றன.

முன்னதாக விஜய்யின் மனைவி, சங்கீதா விவாகரத்து கோரி கொடுத்திருந்த மனு அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றிருந்தது. அந்த மனுவில் விஜய் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சங்கீதா குறிப்பிட்டிருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், இந்த திருமணத்தை மீறிய உறவை தான் கண்டுபிடித்திருந்ததாகவும், ஆனால் அப்போது அதை கைவிட்டுவிடுவதாக விஜய் சொன்னதாகவும், ஆனால் இப்போது வரை அப்படி எதையும் செய்யவில்லை என்றும் சங்கீதா கூறியிருந்தார்.

செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில், சங்கீதா தாக்கல் செய்திருந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "கடந்த 2021ம் ஆண்டு விஜய், ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததை நான் கண்டுபிடித்தேன். இது எனது திருமணத்தின் நம்பிக்கையை உடைத்தது.

விஷயம் என்னவெனில், அந்த உறவை விஜய் முறித்துக்கொள்வதாக என்னிடம் உறுதியளித்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக, எந்தவித வருத்தமும் இன்றி, அந்த உறவை விஜய் தொடர்ந்தார்.
அந்த நடிகை, விஜய்யுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்வதும், அதற்கு விஜய் எதிர்ப்பு தெரிவிக்காததும், தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதைவிட முக்கியமான விஷயம் விஜய் என்னை நடத்திய விதம்தான். விஜய் என்னை கடுமையாக நடத்தினார். சண்டைக்கான காரணம் குறித்து பேசியபோது, அதைப்பற்றி பேசுவதை தவிர்த்தார். ஒரு கட்டத்தில் வீட்டின் ஒரு பகுதியிலேயே தன்னை தனிமைப்படுத்தி வாழ வைத்தார்.

எனவே எனக்கு விவாகரத்து வேண்டும். மட்டுமல்லாது விஜய்யின் வருமானம் மற்றும் சமூக அந்தஸ்துக்கு ஏற்ப ஒரு கவுரவமான மற்றும் நியாயமான ஜீவனாம்ச தொகையை தனக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

இந்த வழக்கு முடியும் வரை அல்லது விஜய் தனக்கு ஈடான மாற்று வசதியை செய்து தரும் வரை நீலாங்கரையில் உள்ள தற்போதைய வீட்டிலேயே வசிப்பதற்கான உரிமையை வழங்க வேண்டும். இந்த விவாகரத்து வழக்குக்கான அனைத்து செலவுகளையும் விஜய்யே ஏற்க வேண்டும்.

தேவைப்பட்டால் இந்த வழக்கில் இரண்டாம் எதிர்மனுதாரராக சம்பந்தப்பட்ட நடிகையை இணைக்க தனக்கு உரிமை வேண்டும். எங்களது குடும்ப கவுரவம் மற்றும் குழந்தைகளின் எதிர்க்காலம் கருதி, இந்த வழக்கு விசாரணையை ரகசியமாக, அதாவது கேமரா முன்பு நடத்த வேண்டும். இது குறித்து சோஷியல் மீடியாக்களிலோ, யூடியூப் தளத்திலோ விவாதிக்க அனுமதி மறுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
-
கொங்கு மண்டல பிரச்சாரத்தின் போது செங்கோட்டையன் வீட்டில் தங்கும் விஜய்.. புலம்பும் ஆதவ் அர்ஜுனா! -
நீட் கோச்சிங் கொடுக்கும் பள்ளிக்கு.. ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? வெளியான ஷாக் தகவல்! -
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா! -
கோவிலில் தேங்காய் உடைத்து பிரச்சாரத்தை தொடங்கிய தவெக முஸ்லிம் வேட்பாளர்கள் -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
வேட்பாளரை கூட சரியா பார்த்து நிறுத்த தெரியாத விஜய்! வழக்கு, சர்ச்சைகளில் சிக்கியவர்களுக்கு சீட் -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
புதுச்சேரி ரங்கசாமி டபுள் சென்டிமென்ட் சக்ஸஸ்?விஜய்யும் அந்த எலுமிச்சை பழமும்.. அப்ப தான் CM யோகமா? -
என் மனைவி சங்கீதா.. பேங்க் அக்கவுண்டில் கோடிக்கணக்கில் போட்டு வைத்த விஜய்! தங்கம் மட்டும் இவ்வளவா? -
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து












Click it and Unblock the Notifications