அமெரிக்காவை திரும்பி பார்க்க வைத்த விவேகானந்தர்.. அமைதிக்கான சிகாகோ உரை
அமெரிக்காவில் நடந்த உலக ஆன்மீக மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரை இப்போதும் உலகின் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
சென்னை: அமெரிக்காவில் நடந்த உலக ஆன்மீக மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரை இப்போதும் உலகின் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
1893 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று தான் அந்த அற்புதமான சம்பவம் நடந்தது. அமெரிக்காவின் சிகாகோ நகரில் உலக ஆன்மீக மாநாடு நடைபெற்றது. பல்லாயிரக்கணக்காக அமெரிக்கர்களும், ஆன்மீக குருக்களும், பல மதத்தை சேர்ந்தவர்களும் விழாவில் கலந்து கொண்டு இருந்தனர்.

அப்போது எல்லோரும் வியக்கும் வகையில், ஜாதி மதங்களை துறந்து எனது அருமை அமெரிக்க சகோதரிகளே! சகோதரர்களே! என்று தனது பேச்சை தொடங்கினார். இப்போதும் உலகின் மிக முக்கியமான உரைகளில் அதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அனைத்து மதங்களின் அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன் என்று ஆரம்பித்து பேச்சு முழுக்க அமைதி, சமாதானம், நட்பு, மத ஒற்றுமை, ஆன்மிகம், தென்னிந்தியாவில் இருந்த வாழ்க்கை என்று பல விஷயங்களை பேசுகிறார். இப்போதும் கூட இணையத்தில் அவரது பேச்சு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications