பட்ஜெட்: பற்றாக்குறை தரும் பயம்
யஷ்வந்த் சின்ஹாவின் 3வது பட்ஜெட் நம்பிக்கையூட்டும் வகையில் தான் அமைந்துள்ளது. கடும் வரி விதிப்புகள் ஏதுமில்லாத பட்ஜெட்.
ஆனால், நிதிப் பற்றாக்குறை 1.11 லட்சம் கோடி. நினைத்தாலே கிலி ஏற்படுத்தும் இந்த பற்றாக்குறையைச் சமாளிக்கப் போவது எப்படி என்று சயான விளக்கம் சின்ஹாவிடமிருந்து வரவில்லை.
தகவல் தொழில்நுட்ப யுகத்துக்கு நாட்டை முன்னேற்றிச் செல்லும் வகையில் கம்ப்யூட்டர் மற்றும் அது தொடர்பான கருவிகளுக்கு இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. சுங்கவயில் பெரும் அளவிலான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது இறக்குமதிக்குத் தான் ஊக்கம் தரும். ஏற்றுமதியைப் பெருக்க எந்த செயல் திட்டம் அறிவிக்கப்படவில்லை.
நடுத்தர ஊதிய வர்க்கத்தினன் முக்கிய சேமிப்புகளில் ஒன்றான பி.எப். மீதான வட்டி குறைப்பு அவர்களை வருத்தமடையச் செய்யும். நஷ்டத்தில் இயங்கும் எந்த வங்கியும் முடப்படாது என்ற அறிவிப்பின் முலம் அந்த வங்கிகளில் பணிபுயும் ஊழியர்கள், குடும்பங்களின் வயிற்றில் அரசு பாலை வார்த்துள்ளது. இந்த வங்கிகளை லாபத்தில் இயங்கச் செய்ய சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குயது.
பொருளாதார வளர்ச்சி முலம் வறுமை ஒழிப்புக்கு நிடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி தந்தாலும் அதற்குத் தேவைப்படும் 8 சதவீத வளர்ச்சியை எட்ட என்ன நிடவடிக்கை எடுக்கப்படும் என்று திட்டவட்டமாகக் கூறவில்லை.