ஆர்.எஸ்.எஸ். தலைவர் குறித்த கருத்து: மாநலங்களவையில் காங். - பா.ஜ.க. மோதல்; சபை ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் ஹெட்கேவர் குறித்து காங்கிரஸ் உறுப்பினர் கபில் சிபல் கூறிய கருத்துக்கு மாநலங்களவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் உறுப்பினர்கள் வார்த்தை மோதலில் ஈடுபட்டதால் மாநலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

சுதந்திரப் போராட்டத்தின்போது பகத் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளை ஹெட்கேவர் அடக்கி வைக்க யன்றார் என்று கபில் சிபல் கூறியதற்கு பா.ஜ.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெவித்தனர். கபில் சிபல் தனது கருத்துக்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று அவர்கள் கூறினர். அதற்கு காங்கிரஸ் தரப்பில் மறுப்பு தெவித்து குரல் எழுப்பப்பட்டது. இரு தரப்பினரும் உரத்த குரலில் பேசிக் கொண்டதால் சபையில் குழப்பம் நலவியது.

உள்துறை அமைச்சர் அத்வானி மற்றும் த்த பா.ஜ.க. தலைவர்கள், கபில் சிபல் தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும் என்று கூறினர். பகத்சிங் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு ஆர்.எஸ்.எஸ். எப்போதுமே மதிப்பு கொடுத்து வந்துள்ளது. ஹெட்கேவன் புகழைக் குலைக்க கபில் சிபல் இவ்வாறு கூறுகிறார் என்று அவர்கள் கூறினர்.

இரு தரப்பினரையும் அமைதிப்படுத்த மாநலங்கவை துணைத் தலைவர் நிஜ்மா ஹெப்துல்லா கடும் யற்சி செய்தார். ஆனால் அதற்கு எந்தப் பலனும் இல்லை. இதையடுத்து சபையை வியாழக்கிழமைக்கு நிஜ்மா ஒத்தி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+