கொலம்பியா மத்தியச் சிறையில் கைதி தப்பி ஓட்டம்
Subscribe to Oneindia Tamil
பகோட்டா: கொலம்பியா மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயில் கைதி தப்பி ஓடினார். ஜேம்ஸ் ஸ்பென்சர் என்ற அந்த 39 வயது கைதி போதைப் பொருட்களை பொதுமக்களுக்கும், கல்லூ மாணவர்களுக்கும் விற்று வந்தது தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். லட்சக்கணக்கில் போதைப் பொருட்களைக் கடத்திய வழக்கிலும் இவர் சம்பந்தப்பட்டிருந்தார்.
போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு புதன்கிழமை இரவு இவர் தப்பித்தார். 1996 தல் இந்தச் சிறையில் பிரபல ரவுடிகள் தப்பித்து வருவது சகஜமாகி வருகிறது. இதைத் தடுப்பதற்காக போலீசார் அந்தச் சிறையைச் சுற்றிலும் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.ஜெயிலிலிருந்து தப்பித்த இவரை மீண்டும் போலீசார் தேடி வருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications