ஆர்.எஸ்.எஸ். விவகாரம்: மக்களவை 6-வது நாளாக ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆர்.எஸ்.எஸ். விவகாரம் குறித்து குறிப்பிட்ட விதியின் கீழ் விவாதிக்க அனுமதிக்க மறுப்பு தெவித்ததையடுத்து மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஆறாவது நாளாக பேராட்டம் நிடத்தின. இதையடுத்து மக்களவை பிற்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டது.

வியாழக்கிழமை மக்களவை கூடியதும், ஆர்.எஸ்.எஸ். குறித்து விதி 184-ன் கீழ் விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோக்கை விடுத்தன. அப்போது, நிாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் எழுந்து, ஏற்கனவே விதி 193-ன் கீழ் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நலையில், 184-ன் கீழ் விவாதிக்கத் தேவையில்லை என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், மத்திய அரசுப் பணியில் உள்ளோரை, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர அனுமதிக்கும் எண்ணமே அரசுக்கு இல்லை. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் அரசு ஊழியர்கள் சேருவது தொடர்பான டிவு சம்பந்தப்பட்ட மாநல அரசுகள் எடுத்ததாகும்.

எந்தப் பிரச்சினை குறித்தும் விதி 193-ன் கீழ் பேச மக்களவைத் தலைவர் பாலயோகி அனுமதி கொடுத்துள்ளார். எனவே இந்த விதியின் கீழ் எந்த விவாதத்திற்கும் அரசு தயாராக உள்ளது என்றார்.

அப்போது காங்கிரஸ் உறுப்பினர் மாதவ ராவ் சிந்தியா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் ரூப் சந்த் மற்றும் பிற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து, மிக க்கியப் பிரச்சினையான ஆர்.எஸ்.எஸ்.விவகாரத்தில் உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு மக்களவைத் தலைவர் மதிப்பு கொடுக்க மறுப்பது கண்டனத்துக்குயது. இப்படி ஒரு நலை ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்றனர்.

இதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் தங்களது கோக்கையை தொடர்ந்து வலியுறுத்திய நலையில இருந்தனர். அவர்களை சமாதானப்படுத்த மக்களவைத் தலைவர் பாலயோகி மேற்கொண்ட யற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணி வரை சபையை ஒத்தி வைத்தார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+