உடன் படித்த மாணவியை சுட்டுக்கொன்ற 6 வயது மாணவன்
வாஷிங்டன்: ஆறு வயதுப் பள்ளிச் சிறுவன் தன் உடன் படித்த மாணவியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தான்.
சம்பவத்திற்கு ன்தினம் விளையாட்டுத் திடலில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.
இதையடுத்து ஆத்திரமடைந்த அந்த மாணவன் தன் வீட்டுப் பக்கத்தில் வசிக்கும் ஜமால் ஜேம்ஸ் என்பவரது துப்பாக்கியைத் திருடிக்கொண்டு வந்து வகுப்பறையில் தன்னுடன் சண்டையிட்ட மாணவியை சுட்டுக் கொன்றான்.
அந்த மாணவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானாள். இச்சம்பவத்தின் போது ஒட்டுமொத்த மாணவ மாணவியரும், வகுப்பாசியரும் எதுவும் செய்ய டியாமல் ஸ்தம்பித்து நன்றனர். பின்னன் அம்மாணவன் பள்ளியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டான்.
வாஷிங்டனில் மவுன்ட் மோஸ் என்ற தொடக்கப் பள்ளியில் இச் சம்பவம் நிடந்தது. இந்த மாணவன் இதுபோல் அடிக்கடி பிற மாணவர்களிடம் சண்டைக்குச் சென்று துப்பாக்கியைக் காட்டி மிரட்டியிருப்பதாகத் தெய வந்துள்ளது. துப்பாக்கி தவிர கூய ஆயுதங்களை வைத்து உடன் படிக்கும் மாணவர்களைத் தாக்கியிருப்பதும் விசாரணையில் தெய வந்துள்ளது.
அமெக்க மனித நில மேம்பாடு மற்றும் உதவிக்கரங்கள் போன்ற அமைப்புகள் இச்சம்பவத்திற்கு கடுங்கண்டனம் தெவித்துள்ளன.
இதுகுறித்து அமெக்க ஜனாதிபதி பில்கிளின்டன் கூறுகையில், வகுப்பறையில் இதுபோன்ற சம்பவங்கள் நிடப்பது கண்டிக்கத்தக்கது. 6 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள் துப்பாக்கிகளை உபயோகிக்க அனுமதிக்கக் கூடாது என்றார்.