வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீர்: தீவிரவாதிகள் உள்பட 4 பேர் சாவு
ஸ்ரீநிகர்:
காஷ்மீர் பள்ளத்தாக்கில் வெள்ளிக்கிழமை இரவிலிருந்து இதுவரை நிடந்த பல்வேறு மோதல்களில், தீவிரவாத எதிர்ப்பு தலைவர் மற்றும் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பாதுகாப்புத் துறை வட்டாரத்தில் இதுகுறித்து கூறப்பட்டதாவது:
தீவிரவாத எதிர்ப்பு தலைவர் கம்மது அமீன் வார் என்ற சேத்தா குஜ்ஜார், தெற்கு காஷ்மீல் உள்ள அனந்த் நிாக் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு கொல்லப்பட்டார். தீவிரவாதிகளின் துப்பாக்கிக் குண்டுகளால் காயமடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
கொல்லப்பட்ட கம்மது அமீன் ன்பு தீவிரவாதியாக இருந்தவர். ன்று ஆண்டுகளுக்கு ன்பு சரண் அடைந்தார். அதன் பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினருடன் சேர்ந்து தீவிரவாதிகளைப் பிடிக்க உதவி வந்தார்.
இதேபோல, காஷ்மீன் அரகுல் அஷ்கும் என்ற பகுதியில் பாதுகாப்புப் படையினர் நிடத்திய தீவிரவாதிகள் வேட்டையின்போது, 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளிடமிருந்து 3 ஏ.கே.47 துப்பாக்கிகளும், சில வெடிபொருட்களும் பறிதல் செய்யப்பட்டன. இறந்தவர்களில் ஒருவரான தஸ்லீமா என்பவன் உடல் சனிக்கிழமை காலை மீட்கப்பட்டது.
இதற்கிடையே, சனிக்கிழமை காலை, அலூசா பந்திபூர் பகுதியில் உள்ள காவல் நலையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நிடத்தினர். அவர்களை நிாேக்கி பாதுகாப்புப் படையினர் சுட்டனர். இதில் எத்தனை பேர் காயமடைந்தனர் என்று தெயவில்லை.
யு.என்.ஐ.