வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
லோக்சபாவைக் கலக்கிய ஆர்.எஸ்.எஸ்., பிகார் விவகாரம்: அவை ஒத்திவைப்பு
டெல்லி:
அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேரலாம் என்று குஜராத் மாநல அரசு பிறப்பித்துள்ள உத்தரவு, மக்களவையில் செவ்வாய்க்கிழமை பெரும் புயலைக் கிளப்பியது. காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் சபையை நிடத்த விடாமல் கடும் அமளியை ஏற்படுத்தியதால், புதன்கிழமை வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை காலை சபை கூடியதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆர்.எஸ்.எஸ். விவகாரத்தைக் கிளப்பினர். குஜராத் அரசு பிறப்பித்த உத்தரவு வாபஸ் பெறப்பட வேண்டும் என்று அவர்கள் ஒரே குரலில் வலியுறுத்தினர்.
மற்றொரு பக்கம், ராஷ்ட்ய ஜனதாதள உறுப்பினர்கள் பிகால் ஆளுநிர் நிடந்து கொண்ட விதத்திற்கு எதிர்ப்பு தெவித்து போராட்டத்தில் இறங்கினர். பிகார் ஆளுநிர் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
பிகார் விவகாரத்தை ரகுவன்ஷ்சிங் மற்றும் பிற ஆர்.ஜே.டி. உறுப்பினர்கள் கிளப்பினர். இரு பிரச்சினைகளும் சேர்ந்து கொண்டு அவையை ஸ்தம்பிக்கச் செய்தன. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையததில் நன்று கொண்டு தங்களது கோக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். அவையை நிடத்திக் கொண்டிருந்த மக்களவை துணைத் தலைவர் பி.எம்.சயீத் பலறை கோக்கை விடுத்தும் உறுப்பினர்கள் அதை செவிமடுக்கவில்லை.
ஆர்.எஸ்.எஸ். விவகாரம் குறித்து விதி 184-ன் கீழ் விவாதம் நிடத்த அனுமதி கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கோனர். அதை சயீத் நராகத்தார். தொடர்ந்து உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சபையை புதன்கிழமை வரை ஒத்தி வைத்து விட்து துணைத் தலைவர் சயீத் வெளியேறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications