For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

அலைபாயுதே.....

allipayutheஅப்பாடா....எத்தனை நிாட்களாகிறது, இப்படி ஒரு இசையைக் கேட்டு.

ரோஜாவில் ரசித்த பழைய ரஹ்மான், மீண்டும் நிம் ன்.

கொஞ்ச நிாட்களாக அதிரடியாக இசைத்து கொண்டிருந்த ரஹ்மான், அவற்றை ஓரம் கட்டி விட்டு, மென்மையால் நிம்மைக் கட்டிப் போட்டிருக்கிறார்.

எஸ்.பி.பி.சரண் குரலில் "காதல் சடுகுடு நிமக்குள் குளிரை உலவ விடுகிறது. ஐஸ்கட்டி போல அப்படி ஒரு குரல். அப்பாவுக்குத் தப்பாமல் பாடுகிறார். கூடவே நிவீன், கிசுகிசுவென அவர் சரணுக்கு ஆதரவாக பாடுவது நில்ல காம்பினேஷன். பாட்டின் துவக்கத்திலும், டிவிலும் வரும் தண்ணீரை இறைப்பு, தத்ரூபமாக இருக்கிறது.

ஊத்துக்காடு வேங்கடசுப்பைய்யன் "அலைபாயுதே. வித்தியாசமான பின்னணி இசையில், ஒஜினல் பாடல் வருகிறது. கானடா ராகத்தில் கல்யாணி மேனன், ஹனி, நிெய்வேலி ராமலஷ்மி ஆகியோர் பாடியுள்ள இப்பாடலுக்கு பின்னணியில் அதிராத, மென்மையான இசை. ன்பு இதுபோன்ற பாடலை இளையராஜாதான் அருமையாக கொடுப்பார். அந்த இடத்தில் இப்போது ரஹ்மான். மனதுக்குள் தட்டிக் கொடுப்பது போல ஒரு உணர்வு, இப்பாடலைக் கேட்கும்போது.

ரட்சகனில் நிம் நிெஞ்சம் கவர்ந்த சாதனா சர்கம், மீண்டும் நிம்மைக் கொள்ளை கொள்ள வந்திருக்கிறார், "ஸ்நிேகிதனே பாடலில். சாரங்கிக் கலைஞர் உஸ்தாத் சுல்தான் கானுடனும், ஸ்ரீனிவாஸுடனும் இணைந்து இப்பாடலைப் பாடியுள்ளார் சாதனா. அன்பை குழைத்தும், தோழமையை இழைத்தும் இப்பாடலுக்கு இசையமைத்திருக்கிறார் ரஹ்மான். உயிர்ப்புடன் பாடியிருக்கிறார் சாதனா. அழகாக இருக்கிறது. (தனிமையில் இந்தப் பாடலை ரசித்தால் மனதுக்குள் ஏதாவது நகழலாம். அப்படி நிேட்டால் அதற்கு ரஹ்மான் பொறுப்பல்ல.)

ஸ்வர்னலதா ரொம்ப நிாளைக்குப் பிறகு வருகிறார். "எவனோ ஒருவன் சோகத்தை வெளிப்படுத்துகிறது. அழகாகப் பாடியுள்ளார்.

கிளிண்டன் கூட ஒரு பாடல் பாடியுள்ளார். ஒரு நமிஷம்..இவர் பில் கிளிண்டன் அல்ல. நிம்ம ஊர் கிளிண்டன். அவரும், ஹஹரனும் இணைந்து "பச்சை நறமே பாடலில் நிம்மை கிரங்க வைக்கிறார்கள். ஹஹரனின் மென்மையான குரலில் இப்பாடல் ரசிக்க வைக்கிறது.

ம்பைக்காரர்களான ஆஷா போன்ஸ்லே, சங்கர் மகாதேவனும் இணைந்து செப்டம்பர் மாதம் பாடலைப் பாடியுள்ளனர். நின்றாக உள்ளது. ஆனால் இப்படி ஒரு பாடல் தேவையா ரஹ்மான்?

ரஹ்மானின் பலம் அவரது இசை என்றால், அதற்கு உயிர் கொடுப்பது வைரத்துவின் வகள். வழக்கம் போல நின்றாக உள்ளது என்று சாதாணமாக கூறி விட டியாத அளவுக்கு, பாடல்களை எழுதியுள்ளார் வைரத்து.

சுல்தான் கானின் சாரங்கியும், பண்டிட் விஸ்வ மோகன் பட்டின், மோகன வீணையும், பாடல்களுக்கு புதிய பொலிவைக் கொடுக்கின்றன.

நில்ல வார்த்தைகள், அழகான இசை, அருமையான குரல்கள் என வித்தியாசமான, அதே சமயம், பழைய ரஹ்மானை நனைவுபடுத்தும் நில்ல பாடல்கள்.

அலைபாயுதே.... கேட்பவர் மனதை அலைபாய வைக்கும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X