வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மத்தியப் பிரதேசத்தில் விவடைந்து வரும் அலிகளின் ராஜ்ஜியம்
டெல்லி:
மத்தியப் பிரதேசத்தில் அலிகளின் ராஜியம் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்துள்ளது. அரசியலில் பெரும் எண்ணிக்கையிலான அலிகள் ஈடுபட்டு வெற்றியும் பெற்று வருகின்றனர்.
தலில் இம் மாநலத்தின் மத்தியப் பகுதியில் உள்ள கத்னி நிகன் மேயராக 51 வயதான கமலா ஜான் என்ற அலி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தனக்கு அடுத்தபடியாக வந்தவரை விட 2,000 ஓட்டுகள் அதிகம் வாங்கினார்.
இதன் பின்னர் இம் மாநலத்தில் 3 அலிகள் கவுன்சிலர்களாகவும் 40 வயதான சப்னம் மெளஸ்மி என்ற அலி சட்ட சபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இவர் எம்.எல்.ஏவாக பதவியேற்றுக் கொண்டார். நிான் எம்.எல்.ஏ. ஆவேன் என கனவில் கூட நனைத்ததில்லை என்று கூறும் இரு பாலிலும் (ஆண், பெண்) பதவியேற்றுக் கொண்டார். பச்சை சேலை அணிந்து இவர் சட்ட சபைக்குள் நுழைந்தார்.
அலிகள் தான் உலகை ஆள்வார்கள் என கடவுள் ராமர் கூறியது உண்மையாகி வருகிறது என்கிறார் கமலா ஜான்
இந்த அலிகள் அனைவருமே சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றவர்கள்.
தங்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக மக்கள் அளித்துள்ள வாக்கு இது என்கின்றனர் இவர்கள்.
2ம் வகுப்பு மட்டுமே படித்துள்ள சப்னம் 12 மொழிகள் பேசுகிறார். சட்டசபைக்குள் நுழைந்த தல் நிாளிலேயே பல கேள்விகைளக் கேட்டு தல்வர் உள்ளிட்ட ஆளும் கட்சியினரை திணர வைத்தார் சப்னம்.
ஐ.ஏ.என்.எஸ்.