வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அரசு அலுவலகங்களில் தினம் ஒரு குறள்: தமிழக அரசு உத்தரவு
சென்னை:
தமிழக அரசு அலுவலகங்கள் அனைத்திலும் தினம் ஒரு திருக்குறள் மற்றும் அதற்குய அர்த்தத்தையும் அலுவலக அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க வேண்டும் என்று மாநல அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் தலைமைச் செயலகம், அதன் அலுவலகங்கள், துறை அலுவலகங்கள், இலாகா அலுவலகங்கள், வாயங்கள், கழகங்கள் மற்றும் மாநல அரசுக்குச் சொந்தமான அனைத்து அலுவலகங்களும், இனிமேல் தினம் ஒரு குறளையும், அதற்கான பொருளையும் தங்களது அலுவலக அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க வேண்டும்.
இதுதவி, ஆட்சி சொல்லகராதியில் உள்ள ஒரு ஆங்கிலச் சொல்லையும், அதற்கான தமிழ்ச் சொல்லையும் அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க வேண்டும்.
இதற்குத் தேவையான பொருட்களுக்கான பணத்தை, தங்களது அலுவலக சில்லரை செலவினத்திலிருந்து எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications