For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

பெரும் பிரச்சனையில் தென் இந்திய தேயிலை தொழில்

திருவனந்தபுரம்:

ஏற்றுமதி குறைந்ததாலும், விலையில் வீழ்ச்சி ஏற்பட்டதாலும், தொழிலாளர்களின் கூலி அதிகத்துவிட்டதாலும் தென் இந்திய தேயிலைத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாகவே இத் தொழில் பெரும் பிரச்சனையில் சிக்கியுள்ளது.

தேயிலையின் விலை 1998ம் ஆண்டு கிலோ 69 ரூபாயாக இருந்தது. 1999ம் ஆண்டு இது 57 ரூபாயாக குறைந்தது. இந்த ஆண்டு விலை மேலும் வீழ்ச்சியடைந்து 48 ரூபாயாகியுள்ளது.

ஆனால், உற்பச்சி செலவு கடந்த ஆண்டு ரூ. 50 ஆக இருந்தது (கிலோ ஒன்றுக்கு). இந்த ஆண்டு இது ரூ. 60 ஆக உயர்ந்துவிட்டது.

இந் நலையில் ஏற்றுமதியும் குறைந்துவிட்டது. இதையடுத்து மத்திய நதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு தென் இந்திய தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கம் கடிதம் எழுதியது. சாதாரண மக்களின் பானமான டீக்கு வ விலக்கு அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது. ஆனால், சின்ஹாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

ஒரு கிலோ தேயிலை மீது ரூ. 2 வ விதிக்கப்படுகிறது. ஆனால், கின் டீ எனப்படும் தேயிலை இலை ஏற்றுமதிக்கு கடந்த பட்ஜெட்டில் வ விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது தான் என்றாலும் மொத்த தேயிலை ஏற்றுமதியில் கின் டீயின் அளவு வெறும் 1 சதவீதம் தான்.

இந் நலையில் இலங்கையிலிருந்து 10.5 மில்லியன் கிலோ தேயிலை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது நலைமையை மிகவும் மோசமாக்கும் எனக் கருதப்படுகிறது. சமீபத்தில் இந்தியாவும் இலங்கையும் தாராள வர்த்தகம் தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டன. இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு தேயிலை ஏற்றுமதி செய்ய இலங்கை திட்டமிட்டுள்ளது. இந்த தேயிலை கொச்சி, கல்கத்தா நிகர்களில் வந்திறங்கும்.

இது தவிர சென்னை, ம்பைக்கு ஜவுளி ஆடைகளையும் இலங்கை அனுப்பவுள்ளது.

இந்தியாவிலிருந்து ரஷ்யாவுக்கு அதக அளவில் தேயிலை ஏற்றுமதி நிடந்து கொண்டிருந்தது. ஆனால், தேயிலை மீது வ விதிப்பு அதிகமானதால் ஏற்றுமதியும் குறைந்துவிட்டது. இந்தியா-ரஷ்யா இடையிலான சிறப்பு 6 ஆண்டு வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிலிருந்து 100 மில்லியன் கிலோ தேயிலையை ரஷ்யா இறக்குமதி செய்ய வேண்டும். ஆனால், இந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு இன்னும் அமலாக்கவில்லை. உடனே, இதனை அமலாக்குமாறு தேயிலை உற்பத்தியாளர்கள் கோ வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் தேயிலை உற்பத்தி 150 மில்லியன் கிலோவாக அதிகத்துவிட்டது. ஆனால், ஏற்றுமதி அதிகக்கவே இல்லை. இந்தியாவின் மொத்த திேயிலை ஏற்றுமதியில் 30 சதவீதம் ரஷ்யாவுககு தான் செல்கிறது. ஆனால், பொருளாதார சிக்கலில் ரஷ்யா திணறி வருவதால் டீ பருகுதலும் அந் நிாட்டில் குறைந்துவிட்டதாக மாஸ்கோவைச் சேர்ந்த ஒருமி வர்த்தக நறுவனத்தின் தலைவர் கசயனென்கோ கூறினார்.

கடந்த ஆண்டு இந்திய தேயிலை உற்பத்தி 870 மில்லியன் கிலோவாக அதிகத்தது. கடந்த 47 ஆண்டுகளில் தேயிலை உற்பத்தி 585 மில்லியன் கிலோ அளவுக்கு அதிகத்துள்ளது. தென் இந்தியாவில் தேயிலை உற்பத்தி 1987ம் ஆண்டில் 147 மில்லியன் கிலோவாக இருந்தது. இது 1998ம் ஆண்டில் 200 மில்லியன் கிலோவாக உயர்ந்துள்ளது.

கேரளத்தின் இடுக்கி, வயனாடு மாவட்டங்களில் மட்டும் 50,000 தேயிலை உற்பத்தியாளர்கள் உள்ளனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X