For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

கேரளம்: யானை செய்த அட்டகாசத்தில் ஆட்டோ, ஜீப் சேதம்

கொல்லம்:

கேரள மாநலம் கொல்லம் மாவட்டம் எழுகோன் என்ற இடத்தில் கோவில் திருவிழாவிற்காக கொண்டு வரப்பட்ட யானை, மதம் பிடித்து ஓடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எரும்பனன்காடு மகாதேவர் கோவில் விழாவுக்கு அந்த யானை அழைத்து வரப்பட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு, திடீரென யானைக்கு மதம் பிடித்தது. இதையடுத்து பாகனிடமிருந்து விடுபட்டு தாறுமாறாக ஓடியது. அங்கிருந்த கடைகளைத் தாக்கியது. இந்த கலாட்டாவில், ஒரு மருந்துக் கடை, ஆட்டோ பணிமனை, ஜீப், இரண்டு ஆட்டோக்கள் சேதமடைந்தன.

யானைக்கு மதம் பிடித்தபோது, அதன் பாகன் யானையின் மீது அமர்ந்திருந்தர். யானை தாறுமாறாக ஓடியபோது, அவர் மேலிருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு லேசாக அடிபட்டது.

கொல்லத்திலிருந்து வரவழைக்கப்பட்ட யானை நபுணர்கள், மதம் பிடித்த யானையைப் பிடித்து சங்கிலியால் கட்டினர். இதையடுத்தே அப்பகுதி சாதாரண நலைக்கு வந்தது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X